» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
பஞ்சாப் கிங்ஸிடம் படுதோல்வி: மும்பை அணியில் அதிரடி மாற்றமா? ஹர்திக் பாண்டியா ஆவேசம்!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 11:06:10 AM (IST)

ஐபிஎல் 2026 கால்பந்து தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
இந்தத் தோல்வியைத் தொடர்ந்து, அணியின் உத்திகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆழமான மறுபரிசீலனை தேவை என்றும், கடினமான முடிவுகள் எடுக்கப்படலாம் என்றும் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
தற்போது வரை விளையாடிய 5 போட்டிகளில் 4-இல் தோல்வியடைந்துள்ள மும்பை இந்தியன்ஸ் அணி, வெறும் 2 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் பின்தங்கியுள்ளது. அதே சமயம், விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.
முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியில் குயின்டன் டி காக் அதிரடியாக விளையாடி 60 பந்துகளில் 112* ரன்கள் குவித்தார். இதனால் மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்தது. இருப்பினும், வலுவான இலக்கை பஞ்சாப் அணி எளிதாக எட்டியது.
பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங் 39 பந்துகளில் 80* ரன்களும், கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் 35 பந்துகளில் 66 ரன்களும் விளாச, அந்த அணி 16.3 ஓவர்களிலேயே இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
தோல்வி குறித்துப் பேசிய ஹர்திக் பாண்டியா, "உண்மையைச் சொல்லப்போனால் இப்போது சொல்வதற்கு ஒன்றும் இல்லை. நாங்கள் எங்கு தவறு செய்கிறோம் என்பதைத் தீவிரமாக ஆராய வேண்டும். இது தனிநபர்களின் தவறா அல்லது திட்டமிடுதலில் பிழையா என்பதை கண்டறிய வேண்டும். வரும் போட்டிகளில் சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். தோல்விக்கு யாராவது பொறுப்பேற்றுத்தான் ஆகவேண்டும்," எனத் தெரிவித்தார்.
மேலும், பந்து வீச்சு, பேட்டிங், பீல்டிங் என அனைத்துத் துறைகளிலும் பஞ்சாப் அணி தங்களை விடச் சிறப்பாகச் செயல்பட்டதாக அவர் பாராட்டினார்.
வெற்றி குறித்து ஸ்ரேயஸ் ஐயர்
பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் கூறுகையில், "எங்கள் அணியின் ஆட்டம் மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது. பிரப்சிம்ரன் சிங் ஒவ்வொரு போட்டியிலும் முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்துவது அணிக்குக் கூடுதல் பலம்," என்றார்.
ஆட்டநாயகன் பிரப்சிம்ரன் சிங் பேசுகையில், "ஆரம்பத்தில் பந்துகளைச் சந்திக்க அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், களத்தில் நிலைத்து நின்றால் பெரிய ரன்களை எடுக்கலாம் என்ற சுயநம்பிக்கையே இந்த வெற்றிக்குக் காரணம்," என்று கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கார்டிப் ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி : தொடரை சமன் செய்தது இங்கிலாந்து!
வெள்ளி 17, ஜூலை 2026 12:00:27 PM (IST)

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அமைப்பில் மாற்றம்: ஐசிசி வருடாந்திர கூட்டத்தில் முடிவு!
வியாழன் 16, ஜூலை 2026 4:37:54 PM (IST)

பிரான்ஸை 2-0 கணக்கில் வீழ்த்தியது ஸ்பெயின்: உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டிக்குத் தகுதி!
புதன் 15, ஜூலை 2026 12:46:04 PM (IST)

அக்ஷர் அசத்தல்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி!
புதன் 15, ஜூலை 2026 8:53:59 AM (IST)

18 ஆண்டுகால பயணம் முடிவு: சிஎஸ்கே தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் விலகல்!
திங்கள் 13, ஜூலை 2026 12:26:07 PM (IST)

உலகக் கோப்பையில் ஸ்பெயின் வரலாற்றுச் சாதனை : பெல்ஜியத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது!
சனி 11, ஜூலை 2026 12:29:27 PM (IST)


