» சினிமா » செய்திகள்

ஆயிரத்தில் ஒருவன் படத்தை கொண்டாடுவதில் மகிழ்ச்சி இல்லை: செல்வராகவன் ஆதங்கம்

சனி 25, அக்டோபர் 2025 3:48:52 PM (IST)



ஆயிரத்தில் ஒருவன் படத்தை இப்போது கொண்டாடுவதில் என்ன பயன் என்று படத்தின் இயக்குநர் செல்வராகவன் ஆதங்கத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், "ஆயிரத்தில் ஒருவன் வெளியான போது, சிலர் செய்த எதிர்மறையான விமர்சனங்கள் வருத்தமாக இருந்தது. ஆனால், இப்போது அவர்களே கொண்டாடுகிறார்கள். ஆனால், இப்போது கொண்டாடுவதில் என்ன பயன்? நிறைய பணமும், நேரமும் அப்படத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. 

அப்படம் வெளியீட்டின் போது திரையரங்குகளில் கொண்டாடப்பட வேண்டும். அவர்கள் இப்போது கொண்டாடினாலும் எனக்கு அதில் மகிழ்ச்சியில்லை” என்று தெரிவித்துள்ளார். மேலும், ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ எழுதி வருவது குறித்தும் பேசியிருக்கிறார்.

செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, பார்த்திபன், ஆண்ட்ரியா, ரீமா சென் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’. 2010-ம் ஆண்டு பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டு தோல்வியை தழுவியது. இப்போது அதன் காட்சியமைப்புகள் உள்ளிட்டவற்றை இணையவாசிகள் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பிரபல இசையமைப்பாளர் சபேஷ் காலமானார்

வியாழன் 23, அக்டோபர் 2025 5:46:39 PM (IST)


Sponsored Ads



Tirunelveli Business Directory