» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
சமந்தா விவாகரத்து குறித்த சர்ச்சை கருத்து: வருத்தம் தெரிவித்தார் அமைச்சர் சுரேகா!
வியாழன் 3, அக்டோபர் 2024 10:41:58 AM (IST)

சமந்தா - நாக சைதன்யா விவாகரத்து குறித்து சர்ச்சையான கருத்தை தெரிவித்த தெலங்கானா மாநில அமைச்சர் கொண்டா சுரேகா வருத்தம் தெரிவித்துள்ளார்.
கடந்த 2017 அக்டோபரில் சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகியோர் திருமண வாழ்க்கையில் இணைந்தனர். இந்நிலையில், கடந்த 2021 அக்டோபரில் இருவரும் பரஸ்பரம் பிரிய முடிவு செய்திருப்பதாக அறிவித்தனர். அதன் பின்னர் இருவரும் அவர்களது பணிகளை கவனித்து வருகின்றனர். நாக சைதன்யாவுக்கும் நடிகை சோபிதா துலிபாலாவுக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
இந்நிலையில், தெலங்கானா சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சரான கொண்டா சுரேகா, சமந்தா - நாகசைதன்யா குறித்து தெரிவித்த கருத்துகள் கடும் சலசலப்பை ஏற்படுத்தின. இருவரது பிரிவுக்கும் தெலங்கானா முன்னாள் அமைச்சரும், சந்திரசேகர் ராவின் மகனுமான கே.டி.ராமாராவ்தான் காரணம் என்று கொண்டா சுரேகா தெரிவித்திருந்தார்.
இதற்கு நடிகர்கள் நாகர்ஜுனா, நாக சைதன்யா, சமந்தா மற்றும் நானி ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர். முன்னாள் அமைச்சர் கே.டி.ராமாராவ், அவதூறு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தனிப்பட்ட நபர்களின் குடும்ப வாழ்க்கையில் அரசியல் செய்ய வேண்டாம் என பலரும் கருத்து தெரிவித்தனர். இந்த சூழலில் அமைச்சர் கொண்டா சுரேகா தனது கருத்தை திரும்பப் பெற்றுள்ளார்.
இது தொடர்பாக சமூக வலைதள பதிவில் அவர் தெரிவித்தது, "என்னுடைய அரசியல் பயணத்தில் அரசியல் ஆதாயத்துக்காக யாருடைய குடும்பப் பிரச்சினை அல்லது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசியது இல்லை. நான் சமந்தா மற்றும் அவரது குடும்பத்தை இழிவுப்படுத்தவில்லை. நான் எப்போதும் அடிப்படையை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைப்பதில்லை. எனது பேச்சும், கருத்தும் உங்களை புண்படுத்தி இருந்தால், அதற்காக எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
பெண்களை இழிவுப்படுத்தும் அரசியல் தலைவாரி நோக்கி தான் நான் கேள்விகளை எழுப்பி இருந்தேன். சமந்தாவின் உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் அதனை செய்யவில்லை. நீங்கள் தன்னம்பிக்கையுடன் வளர்ந்த விதம் குறித்து நான் அறிவேன்” என கூறியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு: இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:34:40 PM (IST)

அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி மசோதா நிறைவேற்றம்: பிரதமர் வரவேற்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:59:35 AM (IST)

விமானம் தரையிறங்கியபோது டயர் வெடித்ததால் பரபரப்பு - 160 பயணிகள் உயிர் தப்பினர்
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:28:53 AM (IST)

பெண் மருத்துவரின் ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்: நிதீஷ் குமாருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:53:19 AM (IST)

ரயில் புறப்படுவதற்கு 10 மணி நேரம் முன்பே ரிசர்வேஷன் சார்ட்: பயணிகள் மகிழ்ச்சி
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:29:04 AM (IST)

வா வாத்தியார் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
வியாழன் 18, டிசம்பர் 2025 3:57:34 PM (IST)

