» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் சம்பளம் போனஸ்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
வெள்ளி 4, அக்டோபர் 2024 8:57:12 AM (IST)
ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் சம்பள தொகையை போனசாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ரயில்வே ஊழியர்களுக்கான போனஸ் பற்றி முடிவு செய்யப்பட்டது. ரயில்வே ஊழியர்களை ஊக்கப்படுத்தி, செயல்திறனை மேம்படுத்த உதவும் வகையில் ரயில்வே ஊழியர்களின் சிறந்த செயல்திறனை பாராட்டி 78 நாட்கள் சம்பளத்தை போனசாக வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த தொகை ரயில் பைலட்டுகள், மேலாளர்கள், தண்டவாள பராமரிப்பாளர்கள், ஸ்டேசன் மாஸ்டர்கள், சூப்பர்வைசர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், பாயின்ட்ஸ்மேன், அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் குரூப் எக்ஸ்.சி. பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ரயில்வே ஊழியர்களுக்கு துர்காபூஜை, தசரா, தீபாவளி பண்டிகையையொட்டி இந்த போனஸ் வழங்கப்படும். இந்த ஆண்டும் 78 நாட்கள் சம்பளம் 11.72 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு போனசாக வழங்கப்படுகிறது. இதற்காக ரூ.2 ஆயிரத்து 28 கோடி ஒதுக்கப்படுகிறது.
ரயில்வே துறையில் 2023-2024 ஆண்டில் 15 ஆயிரத்து 880 லட்சம் டன் சரக்கு கையாளப்பட்டு உள்ளது. 670 கோடி பயணிகள் பயணம் செய்துள்ளனர். பெரிய துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை தொழிலாளர் வாரிய ஊழியர்கள்/ தொழிலாளர்களுக்கு, தற்போதைய உற்பத்தித்திறன் இணைந்த ஊக்கத்தொகை (பி.எல்.ஆர்.) திட்டத்தை மாற்றியமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதற்கு ரூ.200 கோடி வரை ஒதுக்கப்படுகிறது. சுமார் 20 ஆயிரத்து 704 ஊழியர்கள் பயனடைவார்கள். இதேபோல உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விவசாய திட்டங்களுக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. நிலையான விவசாயத்தை ஊக்குவிக்கும் பிரதம மந்திரி ராஷ்டிரிய கிரிஷி விகாஸ் யோஜனா திட்டம் மற்றும் தன்னிறைவுக்கான உணவு பாதுகாப்பை அடைய கிருஷோன்னதி யோஜனா திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கான மொத்த செலவினம் ஒரு லட்சத்து ஆயிரத்து 321 கோடியாக இருக்கும் என்று எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மத்திய அரசு தகவல் வெளியிட்டு உள்ளது.
மேலும் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் மராத்தி, பெங்காலி, பாலி, அசாமி, பராகீர் ஆகிய 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கிட ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஏற்கனவே தமிழ், மலையாளம், சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு, ஒடிசா என 6 மொழிகள் செம்மொழி அந்தஸ்து பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் ரயிலுக்கு ரயில்வே வாரியம் அதிகாரப்பூர்வ ஒப்புதல்!
திங்கள் 22, ஜூன் 2026 5:14:00 PM (IST)

நீட் மறுதேர்வில் ஆள்மாறாட்டம் செய்ய முயற்சி : உத்தரப்பிரதேசம், பீகாரில் 10 பேர் கைது
திங்கள் 22, ஜூன் 2026 11:28:42 AM (IST)

தமிழக முதல்-அமைச்சர் விஜய் பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து!
திங்கள் 22, ஜூன் 2026 10:54:12 AM (IST)

உடல் நலனுக்குத் தீங்கு விளைவிக்கும் 16 வகை கூட்டு மருந்துகளுக்குத் தடை: மத்திய அரசு அதிரடி!
ஞாயிறு 21, ஜூன் 2026 11:19:02 AM (IST)

மராட்டியத்தில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அனுமன் கோவில் மேற்கூரை இடிந்து 7 பக்தர்கள் பலி!
ஞாயிறு 21, ஜூன் 2026 11:11:51 AM (IST)

செல்போன் பறித்துவிட்டு ஸ்கூட்டரில் தப்பிய வாலிபர் திடீர் மரணம்: கூட்டாளி கைது!
சனி 20, ஜூன் 2026 12:16:00 PM (IST)


