» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
இனிமேல் தேர்தல்களில் போட்டியிட மாட்டேன் : சரத் பவார் அறிவிப்பு
புதன் 6, நவம்பர் 2024 12:09:36 PM (IST)
"இனிமேல் நாடாளுமன்ற தேர்தல் அல்லது வேறு தேர்தல்களில் போட்டியிட மாட்டேன் " என்று சரத் பவார் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மிக மூத்த அரசியல்வாதியான சரத் பவார் மகாராட்டிர முதல்வராக நான்கு முறை பதவி வகித்துள்ளார். இந்திய அரசில் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும், வேளாண்மைத் துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். இந்திய தேசிய காங்கிரஸில் இருந்து பிரிந்து 1999இல் இவர் நிறுவிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தார். மேற்கு மராட்டிய மாநிலத்தில் உள்ள பாராமதி சரத்பவாரின் குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமான தொகுதியாகும். பாராமதி மக்கள் சரத்பவாரின் மீது கொண்டுள்ள அன்பின் காரணமாக அவரை எம்.பி., எம்.எல்.ஏ. என இந்த தொகுதியிலிருந்து 14 முறை தேர்வு செய்துள்ளனர்.
இந்நிலையில் பாராமதி சட்டமன்ற தொகுதியில் துணை முதல்வர் அஜித் பவாரை எதிர்த்து, அவரது தம்பி மகனும், சரத்பவாரின் பேரனுமான யுகேந்திர பவார் போட்டியிடுகிறார். தனது பேரன் யுகேந்திர பவாருக்கு ஆதரவாக சரத்பவார் நேற்று சுபா பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், "நான் எனது அரசியல் வாழ்க்கையில் 14 தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளேன். உள்ளூர் அரசியலில் ஈடுபடமாட்டேன் என்று முடிவு செய்து, அனைத்து பொறுப்புகளையும் அஜித்பவாரிடம் ஒப்படைத்தேன். கடந்த 25-30 ஆண்டுகளாக கட்சியின் அனைத்து பொறுப்புகளும் அவரிடம் இருந்தன. இப்போது புதிய தலைமைக்கான ஏற்பாடுகளை செய்யவேண்டிய அவசியம் உள்ளது.
இந்த முழுமையடையாத பணிகளை முடிக்க புதிய தலைமை தேவை. எனது மாநிலங்களவை எம்.பி. பதவி முடிவதற்கு இன்னும் ஒன்றரை ஆண்டு உள்ளது. அதன்பிறகு, மாநிலங்களவை எம்.பி.யாக வேண்டுமா என்பது குறித்து நான் முடிவு எடுக்கவேண்டும். இனிமேல் நான் நாடாளுமன்ற தேர்தல் அல்லது வேறு தேர்தல்களில் போட்டியிட மாட்டேன். ஆனால் சமூகத்தின் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து பாடுபடுவேன்" என்று அவர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஈரான் - இஸ்ரேல் போர் சூழல்: மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை அவசர ஆலோசனை!
வியாழன் 26, மார்ச் 2026 4:30:06 PM (IST)

பகலில் மிடில் பர்த்தில் தூங்கத் தடை: ரயில்வே வாரியத்தின் முக்கிய விதிகள் அறிவிப்பு!
வியாழன் 26, மார்ச் 2026 12:34:45 PM (IST)

உத்தராகண்டைத் தொடர்ந்து குஜராத்: பொது சிவில் சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றம்
வியாழன் 26, மார்ச் 2026 12:19:21 PM (IST)

வந்தே மாதரம்: மத்திய அரசின் சுற்றறிக்கைக்கு எதிரான மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி!
புதன் 25, மார்ச் 2026 5:00:52 PM (IST)

கடும் போர் சூழலிலும் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை: பிரதமர் உறுதி!
செவ்வாய் 24, மார்ச் 2026 5:23:08 PM (IST)

ரஷ்யாவிலிருந்து 7 கச்சா எண்ணெய் கப்பல்கள், அமெரிக்காவிலிருந்து சமையல் எரிவாயு வருகை!
திங்கள் 23, மார்ச் 2026 12:49:55 PM (IST)

