» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
இனிமேல் தேர்தல்களில் போட்டியிட மாட்டேன் : சரத் பவார் அறிவிப்பு
புதன் 6, நவம்பர் 2024 12:09:36 PM (IST)
"இனிமேல் நாடாளுமன்ற தேர்தல் அல்லது வேறு தேர்தல்களில் போட்டியிட மாட்டேன் " என்று சரத் பவார் தெரிவித்துள்ளார்.

மேற்கு மராட்டிய மாநிலத்தில் உள்ள பாராமதி சரத்பவாரின் குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமான தொகுதியாகும். பாராமதி மக்கள் சரத்பவாரின் மீது கொண்டுள்ள அன்பின் காரணமாக அவரை எம்.பி., எம்.எல்.ஏ. என இந்த தொகுதியிலிருந்து 14 முறை தேர்வு செய்துள்ளனர்.
இந்நிலையில் பாராமதி சட்டமன்ற தொகுதியில் துணை முதல்வர் அஜித் பவாரை எதிர்த்து, அவரது தம்பி மகனும், சரத்பவாரின் பேரனுமான யுகேந்திர பவார் போட்டியிடுகிறார். தனது பேரன் யுகேந்திர பவாருக்கு ஆதரவாக சரத்பவார் நேற்று சுபா பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், "நான் எனது அரசியல் வாழ்க்கையில் 14 தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளேன். உள்ளூர் அரசியலில் ஈடுபடமாட்டேன் என்று முடிவு செய்து, அனைத்து பொறுப்புகளையும் அஜித்பவாரிடம் ஒப்படைத்தேன். கடந்த 25-30 ஆண்டுகளாக கட்சியின் அனைத்து பொறுப்புகளும் அவரிடம் இருந்தன. இப்போது புதிய தலைமைக்கான ஏற்பாடுகளை செய்யவேண்டிய அவசியம் உள்ளது.
இந்த முழுமையடையாத பணிகளை முடிக்க புதிய தலைமை தேவை. எனது மாநிலங்களவை எம்.பி. பதவி முடிவதற்கு இன்னும் ஒன்றரை ஆண்டு உள்ளது. அதன்பிறகு, மாநிலங்களவை எம்.பி.யாக வேண்டுமா என்பது குறித்து நான் முடிவு எடுக்கவேண்டும். இனிமேல் நான் நாடாளுமன்ற தேர்தல் அல்லது வேறு தேர்தல்களில் போட்டியிட மாட்டேன். ஆனால் சமூகத்தின் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து பாடுபடுவேன்" என்று அவர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டேராடூனில் மேகவெடிப்பால் கனமழை : வெள்ளத்தில் சிக்கிய 200 மாணவர்கள் மீட்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:49:09 PM (IST)

ஆதார் திருத்தம் கட்டணங்கள் உயர்வு : அக்.1 ஆம் தேதி முதல் அமல்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 12:25:39 PM (IST)

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்று ஒருநாள் கூடுதல் அவகாசம்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 11:45:42 AM (IST)

ஒப்பந்த செவிலியர்களின் உழைப்பை தமிழக அரசு சுரண்டுகிறது: உச்சநீதிமன்றம் கண்டனம் !
திங்கள் 15, செப்டம்பர் 2025 4:56:10 PM (IST)

ஜிஎஸ்டி 2.0 மூலம் வரி குறையும் பொருட்கள் பட்டியல் : புத்தகத்தை வெளியிட்டார் நிர்மலா சீதாராமன்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 11:47:56 AM (IST)

வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதில் பொறியாளர்கள் முக்கிய பங்கு: பிரதமர் வாழ்த்து
திங்கள் 15, செப்டம்பர் 2025 11:32:03 AM (IST)
