» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ரயில்வே துறையில் 6,300 தொழில்நுட்ப வல்லுனர் பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு முடிவு
செவ்வாய் 17, ஜூன் 2025 11:44:33 AM (IST)
ரயில்வே துறையில் காலியாக உள்ள 6,300 தொழில்நுட்ப வல்லுனர் பணியிடங்களை விரைவில் நிரப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
நாட்டில் உள்ள அனைத்து ரயில்வே மண்டலங்களிலும் 51 பிரிவுகளில் காலியாக உள்ள 6,374 தொழில்நுட்ப வல்லுனர்கள் பணியிடங்களை நிரப்ப ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளது.
காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யும் பணி தொடர்பாக பெங்களூருவில் உள்ள ரயில்வே தேர்வு வாரியத்திடம் கலந்து பேசி 51 பிரிவுகளிலும் உள்ள காலியிடங்களை அனைத்து மண்டலங்களும் திருத்தி, ஆன்லைன் அமைப்பில் பதிவேற்ற வேண்டும் என்று அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
அதே நேரம் ரயில்வே துறையில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்கள் இதைவிட அதிகம் உள்ளது என்றாலும் மத்திய அரசின் இந்த நடவடிக்கை, ரயில்வே துறையில் ஊழியர்களுக்கு உள்ள அழுத்தத்தைக் குறைக்க உதவும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. ரயில்வே துறையின் இந்த நடவடிக்கையை சிக்னல் மற்றும் தொலை தொடர்பு பராமரிப்பாளர்கள் சங்கம் வரவேற்றுள்ளது. ரயில்வே துறையின் பாதுகாப்புக்கு இது சரியான நடவடிக்கை என்று கூறியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் ஏன்? தமிழக காவல்துறை பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!
புதன் 18, ஜூன் 2025 12:03:10 PM (IST)

இந்தியா- பாக்., மோதலில் டிரம்ப் மத்தியஸ்தம் செய்யவில்லை: பிரதமர் மோடி கருத்து
புதன் 18, ஜூன் 2025 11:55:34 AM (IST)

திருப்பதி விமான நிலையத்துக்கு ஏழுமலையான் பெயர் : அறங்காவலர் குழு பரிந்துரை
புதன் 18, ஜூன் 2025 11:13:52 AM (IST)

அம்பேத்கருக்கு அவமரியாதை: லாலுவுக்கு எஸ்சி ஆணையம் நோட்டீஸ்
செவ்வாய் 17, ஜூன் 2025 5:51:13 PM (IST)

ஜம்மு - காஷ்மீரில் பஹல்காம் உள்ளிட்ட 16 சுற்றுலாத் தலங்கள் மீண்டும் திறப்பு
செவ்வாய் 17, ஜூன் 2025 5:24:50 PM (IST)

கர்நாடகாவில் தக் லைப் படத்திற்கு தடை விதிக்க முடியாது : உச்சநீதிமன்றம் உத்தரவு
செவ்வாய் 17, ஜூன் 2025 12:38:16 PM (IST)
