» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா வருகை : பிரதமர் நரேந்திர மோடி வரவேற்பு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 10:25:58 AM (IST)

இரு நாட்கள் அரசு முறை பயணமாக டெல்லி வந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை பிரதமர் நரேந்திர மோடி விமான நிலையத்தில் நேரில் வரவேற்றார். அதிபர் புதினுக்கு நேற்றிரவு அவர் சிறப்பு விருந்து அளித்தார்.
இரு தலைவர்களும் இன்று பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். அப்போது இரு நாடுகள் இடையே 25 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2000-ம் ஆண்டில் முதலாவது இந்திய, ரஷ்ய வருடாந்திர உச்சி மாநாடு டெல்லியில் நடைபெற்றது. இந்த வரிசையில் 22-வது உச்சி மாநாடு கடந்த ஆண்டு ஜூலையில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக 23-வது இந்திய, ரஷ்ய உச்சி மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரு நாட்கள் அரசு முறை பயணமாக நேற்று மாலை 6.35 மணிக்கு டெல்லிக்கு வந்தார். டெல்லி பாலம் விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவரை நேரில் வரவேற்றார். ஆரத் தழுவி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டார்.
இதைத்தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி சார்பில் அதிபர் புதினுக்கு சிறப்பு இரவு விருந்து அளிக்கப்பட்டது. அப்போது இரு தலைவர்களும் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து, நேற்றிரவு பிரதமர் தனது இல்லத்தில் புதினுக்கு இரவு விருந்தளித்தார். அப்போது, ரஷிய மொழியில் மொழிப்பெயர்க்கப்பட்ட பகவத் கீதையை புதினுக்கு பரிசாக அளித்தார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மோடி, ”கீதையின் போதனைகள் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு உத்வேகத்தை அளிக்கின்றன.” எனக் குறிப்பிட்டுள்ளார்.இன்று காலை குடியரசுத் தலைவர் மாளிகை செல்லும் புதினுக்கு அணிவகுப்பு மரியாதை அளித்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வரவேற்கவுள்ளார்.
தொடர்ந்து, ஹைதராபாத் மாளிகையில் நடைபெறும் 23-ஆவது இந்திய - ரஷிய உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு புதினும், மோடியும் முக்கிய ஆலோசனையில் ஈடுபடவுள்ளனர்.ராணுவ தளவாடங்கள், வர்த்தகம் உள்ளிட்டவை தொடர்பான முக்கிய ஆலோசனையில் இருநாட்டுத் தலைவர்களும் ஈடுபடவுள்ளனர். இந்த ஆலோசனைக்கு பின்னர், பல முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பமாக இருக்கிறது.
இதன்பிறகு டெல்லி ஐடிசி மவுரியா ஓட்டலில் அதிபர் புதின் நேற்றிரவு தங்கினார்.குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று காலை 11 மணிக்கு அவருக்கு ராணுவ அணி வகுப்புடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதன்பிறகு மகாத்மா காந்தி நினைவிடத்தில் அதிபர் புதின் அஞ்சலி செலுத்துகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கேரளம் பெயர் மாற்றம் மகிழ்ச்சியான தருணம் : கொச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்
புதன் 11, மார்ச் 2026 5:10:36 PM (IST)

கோமா நிலையில் உள்ள இளைஞரை கருணைக் கொலை செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி!
புதன் 11, மார்ச் 2026 12:26:18 PM (IST)

இந்தியாவில் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை: மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி உறுதி
புதன் 11, மார்ச் 2026 11:53:28 AM (IST)

சொத்துப் பதிவுக்கு ரூ. 20 லட்சம் வரை பான் எண் கட்டாயமில்லை: மத்திய அரசு அதிரடிச் சலுகை!
புதன் 11, மார்ச் 2026 11:45:15 AM (IST)

விவசாயியின் மகளின் திருமணத்தில் ராகுல் காந்தி பங்கேற்பு: கிராம மக்கள் நெகிழ்ச்சி
செவ்வாய் 10, மார்ச் 2026 5:44:52 PM (IST)

எரிவாயு தட்டுப்பாடு: மும்பை, பெங்களூருவில் உணவகங்கள் மூடல் - பொதுமக்கள் அதிர்ச்சி!
செவ்வாய் 10, மார்ச் 2026 5:37:46 PM (IST)

