» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சாகர் தீவை இணைக்க ரூ.1,670 கோடி செலவில் பாலம்: மம்தா பானர்ஜி அடிக்கல் நாட்டினார்

செவ்வாய் 6, ஜனவரி 2026 11:51:15 AM (IST)



சாகர் தீவை இணைக்கும் வகையில் 5 கிலோமீட்டர் தூரத்துக்கு ரூ.1,670 கோடி செலவில் பாலம் அமைக்க மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அடிக்கல் நாட்டினார்.

மேற்கு வங்க மாநிலத்தில் ஆண்டுதோறும் கங்காசாகர் மேளா சாகர் தீவில் நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 14-ம் தேதி மகர சங்கராந்தி அன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கானவர்கள் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள இந்த தீவுக்கு வந்து சங்கமத்தில் நீராடி கபில் முனி கோவிலில் பிரார்த்தனை செய்கின்றனர்.

சாகர் தீவிற்கு படகுகள் மூலமாக மட்டுமே செல்ல முடியும் என்பதால் ஆண்டுதோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்த நிலையில், யாத்ரீகர்களின் வசதியை கருத்தில் கொண்டு சாகர் தீவை இணைக்கும் வகையில் 5 கிலோமீட்டர் தூரத்துக்கு ரூ.1,670 கோடி செலவில் பாலம் அமைக்கப்பட உள்ளது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று இதற்கான அடிக்கல் நாட்டினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory