» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
நீதித்துறையில் ஊழல் குறித்த சர்ச்சை பாடம்: உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்; மன்னிப்பு கோரியது என்.சி.இ.ஆர்.டி!
வியாழன் 26, பிப்ரவரி 2026 4:52:28 PM (IST)

8-ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இந்திய நீதித்துறையில் ஊழல் நிலவுவதாகக் குறிப்பிட்டிருந்த சர்ச்சைக்குரிய பாடத்திற்காக, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில் (NCERT) நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளது.
மத்திய அரசின் NCERT வெளியிட்ட 8-ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில், இந்திய நீதித்துறை குறித்து அவதூறு பரப்பும் வகையில் சில பகுதிகள் இடம் பெற்றிருந்தன. இதனைத் தானாக முன்வந்து கவனித்தில் கொண்ட உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.
இது குறித்து கருத்து தெரிவித்த இந்திய தலைமை நீதிபதி சூர்யகாந்த்: "இந்திய உச்ச நீதிமன்றத்தின் மீதும், நீதித்துறையின் மீதும் அவதூறு பரப்ப யாரையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். கல்வி நிறுவனங்கள் இத்தகைய தவறான தகவல்களைப் பரப்புவது ஏற்கத்தக்கதல்ல," எனத் தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார்.
என்.சி.இ.ஆர்.டி விளக்கம்
நீதிமன்றத்தின் கண்டனத்தைத் தொடர்ந்து, என்.சி.இ.ஆர்.டி நிர்வாகம் இன்று அதிகாரப்பூர்வமாக மன்னிப்புக் கடிதம் வழங்கியது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: எதிர்பாராத தவறு: 8-ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் நீதித்துறை குறித்துத் தவறான தகவல்கள் இடம்பெற்றது எதிர்பாராமல் நடந்த ஒரு பிழையாகும். இதற்காக நாங்கள் வருத்தம் தெரிவிப்பதோடு, மன்னிப்பும் கோருகிறோம்.
இந்திய நீதித்துறையை நாங்கள் மிகுந்த மரியாதையுடன் போற்றுகிறோம். பாடம் நீக்கம்: சர்ச்சைக்குரிய அந்தப் பாடப்பகுதி உடனடியாக முழுமையாக நீக்கப்படும். வரும் புதிய கல்வி ஆண்டிற்குள் (2026-27) திருத்தப்பட்ட புதிய பாடப்பகுதிகள் மாணவர்களுக்கு வழங்கப்படும். கல்விப் பாடத்திட்டங்களில் இதுபோன்ற தவறுகள் நேர்வது எதிர்காலத்தில் தவிர்க்கப்பட வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஈரான் கப்பல் மூழ்கடிப்பு: மனிதாபிமான அடிப்படையில் உதவினோம் - அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்
சனி 7, மார்ச் 2026 4:14:06 PM (IST)

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.60 உயர்வு: கட்டுப்பாடு மீண்டும் அமல்
சனி 7, மார்ச் 2026 11:21:45 AM (IST)

இந்தியா எண்ணெய் வாங்க அனுமதிக்க அமெரிக்கா யார்? - மோடி மீது காங்கிரஸ் கடும் தாக்குதல்!
வெள்ளி 6, மார்ச் 2026 12:42:42 PM (IST)
ஈரான் போர்க்கப்பல் மீதான தாக்குதல் விவகாரத்தில் பிரதமர் மவுனம் ஏன்? - ராகுல் காந்தி கடும் கேள்வி!
வியாழன் 5, மார்ச் 2026 4:08:11 PM (IST)

பீகார் அரசியலில் அதிரடி திருப்பம்: ராஜினாமா முடிவில் முதல்வர் நிதிஷ் குமார்?
வியாழன் 5, மார்ச் 2026 10:49:22 AM (IST)

சித்தூர் அருகே கோர விபத்து: லாரி மீது கார் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி!
வியாழன் 5, மார்ச் 2026 8:36:13 AM (IST)

