» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கேரளாவில் ஒன்றரை வயது ஆண் குழந்தை கொடூர கொலை: தாய் - வளர்ப்புத் தந்தை கைது!

புதன் 3, ஜூன் 2026 10:48:27 AM (IST)

கேரளாவில் ஒன்​றரை வயது ஆண் குழந்​தையை, அடித்து துன்​புறுத்தி கொடூரமாக காெலை செய்த வழக்கில் குழந்​தை​யின் தாயும், வளர்ப்பு தந்​தை​யும் கைது செய்​யப்​பட்டு உள்​ளனர்.

கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்​டம், நெடுமங்​காடு அருகே​யுள்ள பனவூரைச் சேர்ந்​தவர் அகிலா (24). இவரது கணவர் அகில் இரு ஆண்​டு​களுக்கு முன்பு தற்​கொலை செய்து கொண்டார். கணவரை இழந்த அகிலா ஒன்​றரை வயது ஆண் குழந்தை அர்​ஷித்​துடன் தனி​யாக வசித்து வந்​தார். இதன் பிறகு அஸ்​கர் (31) என்​பவருடன் அவருக்கு பழக்​கம் ஏற்​பட்​டது. இரு​வரும் திரு​மணம் செய்​யாமல் ஒன்​றாக வாழ்ந்து வந்​துள்​ளனர்.

அஸ்​கர், அகிலா​வின் தனிமைக்கு குழந்தை அர்​ஷத் இடையூறாக இருந்​த​தாகக் கூறப்​படு​கிறது. இதன்​ காரண​மாக வளர்ப்பு தந்தை அஸ்​கர், குழந்​தையை அடிக்​கடி அடித்து உதைத்து துன்​புறுத்தி வந்​துள்​ளார். குழந்​தை​யின் உடலில் சிகரெட்​டால் சூடு வைத்​திருக்கிறார். பலமுறை தாய் அகிலா முன்​பாகவே குழந்​தையை, அஸ்​கர் அடித்து உதைத்​திருக்​கிறார். இந்த கொடூரத்தை அகிலா கண்​டிக்​க​வில்​லை.

கடந்த 29-ம் தேதி வளர்ப்பு தந்தை அஸ்​கர், குழந்தை அர்​ஷித்தை உள்​ளூர் மருத்​து​வ​மனை​யில் சேர்த்​தார். குழந்தை சாப்​பிடும்​போது புரையேறி மயங்​கி​விட்​ட​தாக மருத்​து​வரிடம் அவர் தெரிவித்​தார். உள்​ளூர் மருத்​து​வரின் அறி​வுரைப்​படி திருவனந்தபுரத்​தில் உள்ள எஸ்​ஏடி மருத்​து​வ​மனைக்கு குழந்​தையை ஆம்​புலன்​ஸில் கொண்டு சென்​றனர். அந்த மருத்துவமனை​யில் குழந்​தையை பரிசோ​தித்த மருத்​து​வர்​கள், வரும் வழி​யிலேயே குழந்தை உயி​ரிழந்​து​விட்​ட​தாக தெரிவித்தனர்.

குழந்​தை​யின் உடலில் பல்​வேறு இடங்​களில் காயம் இருந்​த​தால் சந்​தேகமடைந்த எஸ்​ஏடி மருத்​து​வர்​கள், போலீ​ஸாருக்கு தகவல் தெரி​வித்​தனர். இதைத் தொடர்ந்து குழந்​தை​யின் உடல் பிரேதபரிசோதனை செய்​யப்​பட்​டது. அப்​போது பிறப்பு உறுப்பு உட்பட 51 இடங்​களில் பலத்த காயங்​கள் இருந்​தது தெரிய​வந்​தது. கை, கால்​களில் எலும்பு முறி​வும் ஏற்​பட்​டிருக்​கிறது. உடலில் சிகரெட் சூடு காயங்​களும் இருந்​தன.

பிரேதப் பரிசோதனைக்​குப் பிறகு சந்​தேகம் வலுத்​த​தால் வளர்ப்பு தந்தை அஸ்​கர், தாய் அகிலா​விடம் நெடுமங்​காடு போலீ​ஸார் தீவிர விசா​ரணை நடத்​தினர். அப்​போது குழந்​தையை அடித்​துக் கொலை செய்​ததை அஸ்​கர் ஒப்​புக் கொண்​டார். அவரை போலீஸார் கைது செய்து சிறை​யில் அடைத்​தனர். வளர்ப்பு தந்தை​யின் கொடூரங்​கள் தெரிந்​திருந்​தும் குழந்​தையை காப்பாற்றாத தாய் அகிலா​வை​யும் போலீ​ஸார் கைது செய்​தனர்.

இதுதொடர்​பாக போலீஸ் வட்​டாரங்​கள் கூறும்போது, அஸ்​கருக்கு ஏற்​கெனவே அமீனா என்​பவருடன் திரு​மண​மாகி உள்​ளது. அஸ்கரின் கொடூர தாக்​குதல்​களால் அமீனா தற்​போது கோமா நிலை​யில் உள்​ளார். இதனிடையே, ஒரு ஆசிரியை உடன் அஸ்​கர் தொடர்​பில் இருந்​துள்​ளார். அந்த ஆசிரியை மர்​ம​மான முறை​யில் உயி​ரிழந்​திருக்​கிறார். இதில் அஸ்கருக்கு தொடர்பு இருக்கிறதா என விசாரிக்கிறோம்’’ என்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory