» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஐரோப்பிய நாடுகளுக்குப் பிரதமர் மோடி பயணம்: ஜி7 மாநாட்டில் பங்கேற்கிறார்!
சனி 13, ஜூன் 2026 11:44:11 AM (IST)

அரசு முறைப் பயணமாக ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ் மற்றும் ஸ்லோவேக்கியாவுக்குப் பிரதமர் நரேந்திர மோடி இன்று புறப்பட்டுச் சென்றார்.
ஜூன் 19-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த ஐந்து நாள் பயணத்தின்போது, பிரான்சில் நடைபெறும் 52-ஆவது ஜி7 உலக நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் அவர் பங்கேற்கிறார். பயணத்தின் முதற்கட்டமாக பிரான்ஸ் செல்லும் பிரதமர் மோடி, நாளை (ஜூன் 14) அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரானை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இந்தச் சந்திப்பு இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையிலான வியூக உறவை மேலும் வலுவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் மற்றும் வென்ச்சர் கேப்பிட்டல் முதலீடுகளை ஈர்க்கும் வகையிலான புதிய கூட்டு முயற்சிக்கான நிகழ்விலும் மோடி மற்றும் மேக்ரான் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு, இரண்டாவது நாடாக ஸ்லோவேக்கியாவுக்குப் பிரதமர் மோடி பயணிக்கிறார். கடந்த 1993-ஆம் ஆண்டு ஸ்லோவேக்கியா தனி நாடாக விடுதலை பெற்ற பிறகு, இந்தியப் பிரதமர் ஒருவர் அந்நாட்டிற்கு மேற்கொள்ளும் முதல் அரசு முறைச் சுற்றுப்பயணம் இதுவாகும்.
இப்பயணத்தில் ஸ்லோவேக்கியா பிரதமர் ராபர்ட் பிகோ மற்றும் அதிபர் பீட்டர் பெல்லெக்ரினி ஆகியோரைப் பிரதமர் மோடி சந்தித்துப் பேசுகிறார். இந்தச் சந்திப்பின் போது இருதரப்பு வணிகம், பாதுகாப்பு முதலீடு, ஆட்டோமொபைல் மற்றும் ரயில்வே உள்ளிட்ட உற்பத்தித் துறைகள் சார்ந்த முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
இதன் பின்னர், ஜூன் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் பிரான்சில் நடைபெறும் 52-ஆவது ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இம்மாநாட்டில் சர்வதேச அளவிலான பொருளாதார மீட்சி, உலக நாடுகளின் விநியோகச் சங்கிலி ஒற்றுமை மற்றும் பொறுப்பான செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடு குறித்து உலகத் தலைவர்கள் விவாதிக்க உள்ளனர்.
இந்த மாநாட்டின் இடையே, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களைப் பிரதமர் மோடி தனியாகச் சந்தித்துப் பேச வாய்ப்புள்ளது.
பயணத்தின் இறுதிப் பகுதியாக, ஜூன் 18 அன்று பாரீஸ் நகரில் நடைபெறும் இரண்டு முக்கியப் பொது நிகழ்வுகளில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அப்போது, பிரான்ஸ் நாட்டில் வசித்து வரும் இந்திய வம்சாவளியினர் மத்தியில் அவர் சிறப்புரையாற்ற உள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டெல்லியைத் தாக்கிய கடுமையான புழுதிப் புயல் : 92 கி.மீ வேகத்தில் வீசிய சூறாவளிக் காற்று!
செவ்வாய் 16, ஜூன் 2026 4:23:53 PM (IST)

டாக்டரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் இருமல் மருந்து வாங்க முடியாது: மத்திய அரசு அதிரடி
செவ்வாய் 16, ஜூன் 2026 3:22:58 PM (IST)

இந்தியாவில் டெலிகிராம் செயலிக்குத் தற்காலிகத் தடை: மத்திய அரசு அதிரடி உத்தரவு!
செவ்வாய் 16, ஜூன் 2026 11:26:40 AM (IST)

மிக உயரமான யானை ராமனை கேரள அரசே பராமரிக்க வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு
செவ்வாய் 16, ஜூன் 2026 10:19:27 AM (IST)

அமெரிக்கா - ஈரான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் : பிரதமர் மோடி வரவேற்பு
திங்கள் 15, ஜூன் 2026 5:53:29 PM (IST)

சிறுமிக்கு 3 ஆண்டுகளாகப் பாலியல் வன்கொடுமை: கால்பந்து பயிற்சியாளர் போக்சோவில் கைது!
திங்கள் 15, ஜூன் 2026 4:25:49 PM (IST)


