» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ராமர் கோவில் காணிக்கை மோசடி குற்றவாளிகள் தப்ப முடியாது: யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை!
வெள்ளி 26, ஜூன் 2026 4:45:23 PM (IST)
அயோத்தி ராமர் கோவிலில் காணிக்கை மற்றும் நன்கொடை மோசடி புகாரில் தொடர்புடைய குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் தப்ப முடியாது என்றும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரித்துள்ளார்.
அயோத்தி ராமர் கோவிலில் சுவாமிக்கு அளிக்கப்பட்ட காணிக்கை பணம் மற்றும் நகைகள் காணாமல் போனதாக எழுந்த புகாரை அடுத்து, அதுகுறித்து விசாரிக்கச் சிறப்பு விசாரணைக்குழுவை (SIT) உ.பி. அரசு அமைத்தது. இந்தச் சிறப்பு விசாரணைக்குழு தனது 20 பக்க இடைக்கால அறிக்கையை தற்போது அரசிடம் சமர்ப்பித்துள்ளது.வங்கி மற்றும் அறக்கட்டளையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் உட்பட சுமார் 150 பேரிடம் விசாரணை நடத்தியுள்ள இக்குழு, ஸ்ரீ ராம ஜென்ம பூமி அறக்கட்டளையை மறுசீரமைக்க வேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகளை வழங்கியுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் முதற்கட்டமாக 8 பேர் மீது உத்தரப் பிரதேச காவல் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்த விவகாரம் குறித்துப் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், "அயோத்தி என்பது மக்களின் நம்பிக்கை மற்றும் சனாதன தர்மத்தின் அடையாளமாகும். அதன் மீது தவறான பாதையைச் செலுத்த வேண்டாம். சிறப்பு விசாரணைக் குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் உடனடியாக நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
உண்மைக்கும் பொய்க்கும் இடையிலான வேறுபாட்டை அரசு வெளிக்கொண்டு வரும். பொதுமக்களின் நம்பிக்கையுடன் விளையாடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. சனாதன தர்மத்தின் நம்பிக்கையில் தலையிடுபவர்கள் அதற்கான விளைவுகளைச் சந்திக்க நேரிடும், இதில் யாருக்கும் எந்த விலக்கும் அளிக்கப்படாது" என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியாவின் புதிய தங்கச் சுரங்கம்: ஆந்திராவில் 0.8 டன் தங்கம் உற்பத்தி செய்ய இலக்கு!
வெள்ளி 26, ஜூன் 2026 11:24:32 AM (IST)

இந்தியாவில் ரூ.4.1 லட்சம் கோடி முதலீடு: பிரதமர் மோடியுடன் அமேசான் சிஇஓ ஆலோசனை!
வியாழன் 25, ஜூன் 2026 5:43:27 PM (IST)

மதுவில் எலி மருந்து கொடுத்து 8 பேரைத் தீர்த்துக்கட்டிய சைக்கோ கொலைகாரன் - பகீர் தகவல்கள்!
வியாழன் 25, ஜூன் 2026 12:26:11 PM (IST)

எத்தனால் பெட்ரோல் வாகனங்களுக்குக் காப்பீடு மறுப்பு? வதந்திகளுக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி!
புதன் 24, ஜூன் 2026 5:03:34 PM (IST)

மம்முட்டி, மாதவன் உள்ளிட்ட 65 பேருக்கு பத்ம விருதுகள் குடியரசுத் தலைவர் விருது வழங்கினார்!
புதன் 24, ஜூன் 2026 11:14:06 AM (IST)

பள்ளத்தாக்கில் தள்ளிவிட்டு தொழிலதிபர் கொலை : வருங்கால மனைவி, காதலன் கைது!
புதன் 24, ஜூன் 2026 11:07:28 AM (IST)


