» செய்திகள் - விளையாட்டு » உலகம்
சீனாவை தொடர்ந்து வியட்நாமை தாக்கியது`யாகி' புயல்: இயல்பு வாழ்க்கை முடங்கியது!
ஞாயிறு 8, செப்டம்பர் 2024 11:35:38 AM (IST)

சீனாவை தொடர்ந்து யாகி புயல் வியட்நாமை தாக்கியது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.
பிலிப்பைன்சில் உருவான யாகி புயலால் கடந்த வாரம் அங்கு கனமழை பெய்தது. இதனை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி அங்கு 14 பேர் பலியாகினர். இதனையடுத்து அந்த புயல் சீனாவை நோக்கி நகர்ந்தது. தென்கிழக்கு மாகாணமான ஹைனான் தீவு அருகே கரையை கடந்த யாகி புயலால் மணிக்கு 170 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இதனால் அங்கு மழை வெளுத்து வாங்கியது.
இதன் காரணமாக அங்கு ஏராளமான மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. இதனால் அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் சுமார் 8 லட்சம் பேர் இருளில் மூழ்கினர். மேலும் இந்த புயலுக்கு சீனாவில் 2 பேர் உயிரிழந்தனர். 92 பேர் படுகாயம் அடைந்து யில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.
இந்தநிலையில் யாகி புயல் தற்போது வியட்நாமை நோக்கி நகர்ந்து வருகிறது. அங்குள்ள குவாங் நின் நகரில் புயல் கரையை கடக்கும்போது அதிகபட்சம் 200 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வியட்நாமில் தலைநகர் ஹனோய் உள்பட 4 விமான நிலையங்கள் மூடப்பட்டன. இதன் காரணமாக 300-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு திட்டமிட்டபடி செல்ல முடியாமல் அவதியுற்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாஸ்கோ வரை பாயும் ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்குவேன்: ரஷியாவுக்கு டிரம்ப் மிரட்டல்!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 10:28:15 AM (IST)

2025ஆம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு
திங்கள் 13, அக்டோபர் 2025 5:21:39 PM (IST)

வர்த்தக போரை விரும்பவில்லை; அமெரிக்காவின் மிரட்டலுக்கு பயப்பட மாட்டோம் - சீனா உறுதி
திங்கள் 13, அக்டோபர் 2025 12:02:17 PM (IST)

ராஜினாமா செய்த 4 நாட்களில் பிரான்ஸ் பிரதமராக செபாஸ்டியன் மீண்டும் நியமனம்
ஞாயிறு 12, அக்டோபர் 2025 11:24:27 AM (IST)

படைகள் வாபஸ் பெறப்பட்டன காசா போர்நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது
சனி 11, அக்டோபர் 2025 4:30:39 PM (IST)

இந்தியா-ஆஸ்திரேலியா இடையே பாதுகாப்பு ஒப்பந்தங்கள் : ராஜ்நாத் சிங் முன்னிலையில் கையெழுத்து
வெள்ளி 10, அக்டோபர் 2025 9:25:54 PM (IST)
