» செய்திகள் - விளையாட்டு » உலகம்
சவுதி அரேபியாவில் சட்ட விரோதமாக குடியேறிய 20 ஆயிரம் பேர் கைது
திங்கள் 28, அக்டோபர் 2024 10:42:42 AM (IST)

சவுதி அரேபியாவில் சட்ட விரோதமாக குடியேறிய 20 ஆயிரம் பேர், மற்றும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக 24 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
ஆப்பிரிக்க நாடுகளில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் ஏராளமானோர் ஐரோப்பா மற்றும் அரபு நாடுகளுக்கு அகதிகளாக குடியேறுகின்றனர். அவ்வாறு செல்லும்போது பெரும்பாலும் அவர்கள் சட்ட விரோத பயணத்தையே மேற்கொள்கின்றனர். எனவே சவுதி அரேபியாவுக்குள் சட்ட விரோதமாக குடியேறுபவர்களை கட்டுப்படுத்த அந்த நாட்டு அரசாங்கம் எல்லை பகுதிகளை தீவிரமாக கண்காணிக்கிறது.
அந்தவகையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சட்ட விரோதமாக குடியேறியதாக 20 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் எத்தியோப்பியாவைச் சேர்ந்தவர்கள் ஆவர். மேலும் சட்ட விரோதமாக குடியேறியவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக 24 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படலாம் என உள்துறை அமைச்சகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டித்வா’ புயல் பாதிப்பு: இலங்கைத் தமிழா்களுக்கு இந்திய தூதரகம் நிவாரணம்
திங்கள் 22, டிசம்பர் 2025 10:20:10 AM (IST)

வங்கதேசத்தில் இந்துக்களை குறிவைத்து வன்முறை: இந்தியாவுக்கு எதிராக போராட்டம் தீவிரம்!
சனி 20, டிசம்பர் 2025 10:46:38 AM (IST)

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: பிரதமர் மோடி முன்னிலையில் கையெழுத்து
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:18:42 AM (IST)

தைவானுக்கு 10 பில்லியன் டாலர் ஆயுதங்கள் விற்பனை: அமெரிக்கா அறிவிப்பு - சீனா கண்டனம்!
வியாழன் 18, டிசம்பர் 2025 5:48:17 PM (IST)

புயல் காற்றில் உடைந்து விழுந்த சுதந்திர தேவி சிலை: பிரேசிலில் பரபரப்பு!
புதன் 17, டிசம்பர் 2025 11:58:56 AM (IST)

பிரதமர் மோடிக்கு கார் ஓட்டிய ஜோர்டான் இளவரசர்!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 4:03:51 PM (IST)

