» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருநங்கையின் உரிமைகள் குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம்: நீதிபதிகள் பங்கேற்பு
சனி 27, ஜூலை 2024 11:13:53 AM (IST)

குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிர் கல்லூரியில் திருநங்கையின் உரிமைகள் மற்றும் கேலிவதை தடுப்புச் சட்டம் பற்றிய சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
திருநெல்வேலி முதன்மை மாவட்ட நீதிபதி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் எம்.சாய்சரவணன் வழிகாட்டுதலின்படி தென்காசி முதன்மை மாவட்ட நீதிபதி பி. ராஜவேல் தலைமையில் தென்காசி முதன்மை சார்பு நீதிபதி வட்ட சட்ட பணிகள் குழுவின் தலைவர் ஜெ. கிறிஸ்டல் பபிதா முன்னிலையில் குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில் வைத்து திருநங்கையின் உரிமைகள் மற்றும் கேலிவதை தடுப்புச் சட்டம் 1997 பற்றிய சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
திருநங்கைகளை கேலி செய்யக்கூடாது. அவர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். புதிய மூன்று வகையான சட்டங்களை ஆண் பெண் மற்றும் திருநங்கை என பாலின வகைப்பாடு குறிப்பிடப்பட்டு திருநங்கைகளுக்கும் சம உரிமை அளிக்கப் பட்டுள்ளது. அனைத்து கல்வி நிறுவனங்களிலும் அவர்களுக்கு கல்வி கற்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அனைத்து துறைகளிலும் அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது என நீதிபதிகள் பேசினர்.
முகாமில் தென்காசி முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ஜெ. ராஜேஷ்குமார், தென்காசி குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி எம். பொன்பாண்டி, தென்காசி வட்ட சட்ட பணிகள் குழு வழக்கறிஞர்கள் வேல்பாண்டி, மரகதம், முத்துக்குமார், சசிகுமார்,ஜெபா, செல்வகுமார், சத்யா,ரஹ்மத் பாசானா, மாரி லட்சுமி, மாவட்ட சமூக நல அலுவலர் மதிவதனா, சகி ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி ஜெயராணி, கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த இளம்பெண் தற்கொலை: 4 குழந்தைகள் பரிதவிப்பு
ஞாயிறு 13, ஜூலை 2025 10:59:59 AM (IST)

பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்
சனி 12, ஜூலை 2025 4:17:07 PM (IST)

ஆசிரியைகள் பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஆசிரியர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்!
சனி 12, ஜூலை 2025 3:38:39 PM (IST)

வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
வெள்ளி 11, ஜூலை 2025 4:08:36 PM (IST)

உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி: மாவட்ட வருவாய் அலுவலர் துவக்கி வைத்தார்
வெள்ளி 11, ஜூலை 2025 12:50:40 PM (IST)

சுங்கச்சாவடியில் டிரைவர், கண்டக்டர்களிடம் கையெழுத்து வாங்கி அரசு பஸ்களை அனுமதித்த ஊழியர்கள்
வெள்ளி 11, ஜூலை 2025 8:22:12 AM (IST)
