» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
அரசு பள்ளியில் ரசாயன பாட்டில் உடைந்ததால் விபரீதம்: 15 மாணவிகள் திடீர் மயக்கம்!
சனி 10, ஆகஸ்ட் 2024 11:10:41 AM (IST)
செங்கோட்டை அரசு பள்ளி வகுப்பறையில் ரசாயன பாட்டில் உடைந்ததால் 15 மாணவிகளுக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவிகள் பயின்று வருகின்றனர். நேற்று காலையில் பிளஸ்-2 பயிலும் மாணவி ஒருவர் கொண்டு வந்திருந்த ரசாயன பாட்டில் (வாசனை திரவியம்) எதிர்பாராதவிதமாக தவறி தரையில் விழுந்து உடைந்தது.
இதனால் அந்த வகுப்பறை முழுவதும் பயங்கர நெடியுடன் கூடிய வாசனை பரவியது. இதில் 2 மாணவிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் கூச்சலிட்டனர். இதுகுறித்து வகுப்பு ஆசிரியை, தலைைம ஆசிரியைக்கு தகவல் தெரிவித்தார்.
உடனே 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, மயங்கிய 2 மாணவிகளையும் செங்கோட்ைட அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் அதே வகுப்பறையில் மற்ற மாணவிகள் மீண்டும் அமர்ந்து படிக்க தொடங்கினர். ரசாயனத்தின் நெடி வகுப்பறை முழுவதும் பரவி இருந்ததால் சிறிதுநேரத்தில் அடுத்தடுத்து 13 மாணவிகள் மயங்கி விழுந்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியைகள் மீண்டும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை வரவழைத்து, மயங்கிய மாணவிகளை சிகிச்சைக்காக செங்்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக 7 மாணவிகளை தென்காசி அரசு மருத்துவமனைக்கும், 2 மாணவிகளை தனியார் மருத்துவ மனைக்கும் அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு பிறகு 7 மாணவிகள் வீடுகளுக்கு திரும்பினர். செங்கோட்டை அரசு மருத்துவமனையில் 4 மாணவிகளுக்கும், தென்காசி அரசு மருத்துவமனையில் 2 மாணவிகளுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
வகுப்பறையில் மாணவிகள் மயக்கமடைந்து மருத்துவ மனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதால், பெற்றோர்கள் பதற்றத்துடனும் கண்ணீருடனும் மருத்துவமனைகளுக்கு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அறிந்ததும் கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ., மருத்துவமனைகளுக்கு ெசன்று சிகிச்சை பெறும் மாணவிகளை பார்வையிட்டு உடல்நலம் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.
இதுகுறித்து மாணவிகளின் பெற்றோர்கள் கூறுகையில், வகுப்பறையில் ரசாயன பாட்டில் தவறி விழுந்து உடைந்ததும், அதனை தண்ணீரால் கழுவி விடாமல் தொடர்ந்து அங்கேயே மாணவிகளை அமர வைத்து படிக்க வைத்ததால்தான் அடுத்தடுத்து மயங்கியதாக தெரிவித்தனர்.
இதையடுத்து மாணவிகள் பயின்ற வகுப்பறையை சுத்தம் செய்தனர். அந்த வகுப்பு மாணவிகளை வேறு அறையில் அமர வைத்து பாடம் நடத்தினர். செங்கோட்டை அரசு பள்ளியில் ரசாயன பாட்டில் உடைந்து விழுந்து 15 மாணவிகள் மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை, ராமேசுவரம் ரயில்கள் தாம்பரம் வரை மட்டுமே இயக்கம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:28:06 AM (IST)

செல்போன் பார்த்ததைக் கண்டித்த பெற்றோர்: 8ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:23:45 AM (IST)

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா... பாட்டு பாடி முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம்!
சனி 4, ஏப்ரல் 2026 10:44:09 AM (IST)

பேருந்து மோதி நண்பர்கள் இருவர் உயிரிழப்பு: திருவிழாவிற்கு வந்த இடத்தில் சோகம்
சனி 4, ஏப்ரல் 2026 8:53:59 AM (IST)

கடன் கேட்ட நண்பனை கல்லால் அடித்துக் கொன்ற வாலிபர் கைது: குடிபோதையில் வெறிச்செயல்!
சனி 4, ஏப்ரல் 2026 8:47:35 AM (IST)

நெல்லையில் 100 அடி நீளத் துணியில் தேர்தல் ஓவியம்: மாணவ, மாணவிகள் அசத்தல்!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 4:16:59 PM (IST)

