» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதல்
திங்கள் 12, ஆகஸ்ட் 2024 10:58:41 AM (IST)

குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர்வரத்து மிதமாக உள்ளது. சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்பொழுது சீசன் காலம். குற்றால சீசன் நிறைவு பெறும் நிலைக்கு வந்தாலும் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து மிதமாக உள்ளது.
கடந்த 2 நாட்களாக விடுமுறை தினம் என்பதால் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. கூட்டம் அதிகமாக காணப்பட்ட நேரங்களில் சுற்றுலா பயணிகள் வரிசையில் நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டனர். சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரிப்பு காரணமாக தென்காசி, குற்றாலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வாகன போக்குவரத்து மிகுந்து காணப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை: தனியார் பள்ளி பஸ்கள் தீவைத்து எரிப்பு!
வெள்ளி 18, ஜூலை 2025 5:48:22 PM (IST)

அரசுப் பேருந்தில் ஏசி வேலை செய்யவில்லை என வழக்கு; அதிகாரிகள் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு!
வெள்ளி 18, ஜூலை 2025 5:11:40 PM (IST)

நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது!
வெள்ளி 18, ஜூலை 2025 4:26:47 PM (IST)

சட்டப்பணி ஆணைக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் : நீதிபதி பங்கேற்பு
வெள்ளி 18, ஜூலை 2025 11:36:25 AM (IST)

திருச்சி சிவா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் : தெக்ஷண மாற நாடார் சங்கம்
வியாழன் 17, ஜூலை 2025 4:51:08 PM (IST)

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது: சபாநாயகர் பேட்டி
வியாழன் 17, ஜூலை 2025 3:41:27 PM (IST)
