» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மானிய விலையில் உணவுப் பொருட்கள் பெற ஆதார் பதிவு: செப்.30 வரை நீட்டிப்பு!
திங்கள் 12, ஆகஸ்ட் 2024 5:35:22 PM (IST)
மானிய விலையில் உணவுப் பொருட்கள் பெற, பயனாளிகள் தங்களது ஆதார் எண் பதிவு செய்தல் அல்லது ஆதார் எண்ணினை அங்கீகாரம் செய்ய விண்ணப்பித்தல் தொடர்பான கால அவகாசம் செப்.30ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2013 ன் கீழ் மானிய விலையில் உணவுப் பொருட்கள் பெற, பயனாளிகள் தங்களது ஆதார் எண் பதிவு செய்தல் அல்லது ஆதார் எண்ணினை அங்கீகாரம் செய்ய விண்ணப்பித்தல் தொடர்பான கால அவகாசம் 30.09.02024 வரை நீட்டிப்பு செய்து மத்திய அரசு, உணவு மற்றும் பொது விநியோகத் துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பயனாளிகள் மேற்படி கால அவகாசத்தினை பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாலிபர் மீது கார் ஏற்றிய போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்!
வியாழன் 18, செப்டம்பர் 2025 11:39:54 AM (IST)

பிளாஸ்டிக் குடோன் தீவிபத்தில் 10 லட்சம் சேதம்: புகைமூட்டத்தால் பொதுமக்கள் கடும் அவதி!!
வியாழன் 18, செப்டம்பர் 2025 11:36:24 AM (IST)

தாயை வெட்டிக்கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை: நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு
வியாழன் 18, செப்டம்பர் 2025 8:29:56 AM (IST)

நெல்லையில் 26ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தகவல்!
புதன் 17, செப்டம்பர் 2025 3:53:47 PM (IST)

பேரீச்சம்பழத்தில் கஞ்சாவை மறைத்து வைத்து சிறையில் மகனுக்கு கொடுக்க வந்த பெண் கைது!
புதன் 17, செப்டம்பர் 2025 11:04:28 AM (IST)

நெல்லை ரயில் நிலையத்தில் வடமாநில வாலிபர் தாக்குதல்: 3 பயணிகள் காயம்!
புதன் 17, செப்டம்பர் 2025 10:38:38 AM (IST)

வரதராஜ்Aug 14, 2024 - 06:46:57 AM | Posted IP 172.7*****