» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
சென்டிரல் - நாகர்கோவில் இடையே அதிவிரைவு சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
புதன் 14, ஆகஸ்ட் 2024 11:12:00 AM (IST)
சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை சென்டிரல் - நாகர்கோவில் இடையே அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
சுதந்திர தின விழாவை முன்னிட்டு, பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை சென்டிரல் - நாகர்கோவில், சென்னை சென்டிரல் - கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை சென்டிரலில் இருந்து இன்று (புதன்கிழமை) இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் அதிவிரைவு சிறப்பு ரயில் (வண்டி எண்.06055) மறுநாள் மதியம் 12.30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
மறுமாா்க்கமாக, நாகர்கோவிலில் இருந்து நாளை (வியாழக்கிழமை) மாலை 3.50 மணிக்கு புறப்பட்டு சென்னை ஆவடி வரும் ஏ.சி.அதிவிரைவு சிறப்பு ரயில் (06056) மறுநாள் காலை 5.10 மணிக்கு ஆவடி வந்தடையும். இந்த ரயில் சென்டிரலில் இருந்து நாகர்கோவில் செல்லும் போது ஆவடி செல்லாது. நாகர்கோவிலில் இருந்து வரும் போது ஆவடி ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும். சென்டிரல் ரயில் நிலையம் செல்லாது.
சென்டிரல் - கொச்சுவேலி
இதேபோல, சென்னை சென்டிரலில் இருந்து இன்று (புதன்கிழமை) மற்றும் 21-ந்தேதி மாலை 3.45 மணிக்கு புறப்பட்டு கேரள மாநிலம் கொச்சுவேலி செல்லும் ஏ.சி. எக்ஸ்பிரஸ் ரயில் (06043) மறுநாள் காலை 8.30 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும்.
மறுமார்க்கமாக, கொச்சுவேலியிலிருந்து நாளை (வியாழக்கிழமை) மற்றும் 22-ந்தேதி மாலை 6.25 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் ஏ.சி.எக்ஸ்பிரஸ் ரயில் (06044) மறுநாள் காலை 11.25 மணிக்கு சென்டிரல் வந்தடையும். கொச்சுவேலியிலிருந்து சென்னை சென்டிரல் வரும் எக்ஸ்பிரஸ் ரயில் கூடுதலாக பெரம்பூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பொருநை அருங்காட்சியகத்தினை பார்வையிட பொதுமக்கள் ஆர்வம்!
செவ்வாய் 23, டிசம்பர் 2025 5:10:11 PM (IST)

கால்நடைகளுக்கான தடுப்பூசி பணி டிசம்பர் 29-ஆம் தேதி தொடக்கம் - ஆட்சியர் தகவல்
செவ்வாய் 23, டிசம்பர் 2025 3:57:52 PM (IST)

பொருநை அருங்காட்சியகத்திற்கு பேருந்துகள் இயக்கம் - ஆட்சியர் சுகுமார் தகவல்
செவ்வாய் 23, டிசம்பர் 2025 10:38:30 AM (IST)

பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட நாளை முதல் அனுமதி: கட்டணம் நிர்ணயம்!
திங்கள் 22, டிசம்பர் 2025 8:01:26 PM (IST)

திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் சுகுமார் பங்கேற்பு
திங்கள் 22, டிசம்பர் 2025 5:31:58 PM (IST)

ஆட்சி மாற்றத்துக்காக பிரசாரம் செய்வேன்: நெல்லையில் சரத்குமார் பேட்டி
திங்கள் 22, டிசம்பர் 2025 4:42:33 PM (IST)

