» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடியில் வ.உ.சி பிறந்த நாள் விழா!
வியாழன் 5, செப்டம்பர் 2024 10:16:39 AM (IST)

தூத்துக்குடியில் வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரின் 153வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி பழைய மாநகராட்சி வளாகத்தில் உள்ள அன்னாரது திருவுருவ சிலைக்கு சைவ வேளாளர் சங்கம் சார்பில் தலைவர் டி.ஏ. தெய்வநாயகம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் செயலாளர் மீனாட்சிநாதன், பொருளாளர் தளவாய், சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சண்முகசுந்தரம், செந்தில் ஆறுமுகம், ஸ்ரீதர், எல்ஐசி கிட்டு, கோமதிநாயகம், மூர்த்தி, பாலன், முத்துகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்

வ.உ.சி., நற்பணி மன்றம்: தூத்துக்குடி வ.உ.சி., நற்பணி மன்றம் சார்பில் அதன் தலைவர் செந்தில் ஆறுமுகம் வ.உ. சிதம்பரனார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் செயலாளர் செந்தில் வீரபாகு, பொருளாளர் மகாராஜன், சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சண்முகசுந்தரம், ராஜேந்திரன், குற்றாலிங்கம், சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்

இந்து முன்னணி : தூத்துக்குடி மாநகர இந்து முன்னணி சார்பில் தலைவர் பாலமுருகன் வஉசி சிலைக்கு மாலை அணிவித்தார். இதில் மாநகர தலைவர் ராகவேந்திரா, சுடலைமணி, சங்கர் விஜய இசக்கி உள்பட பலர் கலந்து கொண்டனர்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலியில் திருநங்கைகள் தினம் குறைதீர் முகாம் : ஆட்சியர் இரா.சுகுமார் பங்கேற்பு
சனி 26, ஏப்ரல் 2025 4:43:20 PM (IST)

நாங்குநேரி வழக்கறிஞர் சங்கத் தேர்தல் : உயர்நீதிமன்றம் உத்தரவு
சனி 26, ஏப்ரல் 2025 3:26:36 PM (IST)

தடைசெய்யப்பட்ட மையோனைஸ் பயன்படுத்தும் உணவு வியாபாரிகள் மீது நடவடிக்கை: அரசு உத்தரவு!
சனி 26, ஏப்ரல் 2025 12:04:15 PM (IST)

போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை : ஆட்சியர் எச்சரிக்கை
சனி 26, ஏப்ரல் 2025 10:31:17 AM (IST)

நெல்லை - செங்கோட்டை பயணிகள் ரயிலில் கூடுதல் பெட்டிகள்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு!
வெள்ளி 25, ஏப்ரல் 2025 8:24:54 PM (IST)

கள்ளக்காதல் விவகாரத்தில் பெண்குழந்தை கொடூர கொலை: தாய், 3 வாலிபர்கள் கைது
வெள்ளி 25, ஏப்ரல் 2025 7:35:07 PM (IST)
