» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லையில் செப். 14 ல் தேசிய மக்கள் நீதிமன்றம்
சனி 7, செப்டம்பர் 2024 11:37:02 AM (IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் வருகிற 14 ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக திருநெல்வேலி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2024ஆம் ஆண்டில் தேசிய மக்கள் நீதிமன்றத்தை வருகிற 14 ஆம் தேதி வட்ட நீதிமன்றங்கள் முதல் உச்சநீதிமன்றம் வரை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவினால் 9 வட்டங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.
நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அசல் வழக்குகள், தொழிலாளர் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு வழக்குகள், குடும்ப வழக்குகள் உள்ளிட்டவையும், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத முன் வழக்குகளாகிய வங்கிக் கடன் வழக்குகள் அனைத்தும் சமரச பேச்சுவார்த்தைக்கு எடுத்துக் கொள்ளப்படும். திருநெல்வேலியில் தேசிய மக்கள் நீதிமன்றத்தை இம் மாதம் 14 ஆம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட முதன்மை நீதிபதி தொடங்கி வைக்க உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 7 ஆண்டு சிறை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 8:23:31 AM (IST)

அரசு பள்ளியில் மாணவர்களுக்கிடையே கோஷ்டி மோதல் : 13 பேர் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு!
திங்கள் 15, செப்டம்பர் 2025 8:35:27 PM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 5:37:43 PM (IST)

வாரச்சந்தையில் பயங்கர தீ விபத்து: ரூ.9 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 5:35:42 PM (IST)

ஆட்டோக்களின் அதிக கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்த வேண்டும்: ஆர்டிஓவிடம் கோரிக்கை!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 10:26:08 AM (IST)

நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை இயக்கக்கூடாது: மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையால் பரபரப்பு
வெள்ளி 12, செப்டம்பர் 2025 8:42:46 AM (IST)

வணக்கம் தமிழகம்Sep 12, 2024 - 03:42:41 PM | Posted IP 172.7*****