» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அரசுக்கு துணையாக இருப்பார்: சபாநாயகர் அப்பாவு
திங்கள் 30, செப்டம்பர் 2024 10:14:07 AM (IST)

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அரசுக்கு துணையாக இருப்பார் என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.
சென்னையில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: தமிழ்நாடு முழுவதும் சாமானிய மக்களுக்கு இந்த அரசு நிறைய பணிகளை செய்து கொண்டு இருக்கிறது. அது இன்னும் வேகமாக செயல்படுவதற்கு, துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த அரசுக்கு துணையாக இருப்பார்.
இந்தியாவில் எந்த பதவி வழங்கினாலும் விமர்சனங்கள் இல்லாமல் இல்லை. பிரதமருக்கு விமர்சனம் இல்லையா? முதல்-அமைச்சருக்கு விமர்சனம் இல்லையா? விமர்சனம் செய்யதான் செய்வார்கள் அதான் அரசியல். எதிர்க்கட்சிகள், ஆளும் கட்சியின் நிறை, குறைகளை சுட்டிக்காட்டுவது அது மக்களுக்கு நன்மையான காரியமாகும். குறை சொல்பவர்கள் எந்த தவறும் செய்யாத மனிதன் மீது எந்த குறையும் கூறக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை கண்டித்து நெல்லையில் பாகிஸ்தான் கொடி எரிப்பு!
வியாழன் 24, ஏப்ரல் 2025 5:48:53 PM (IST)

விஜயாபதியில் ரூ.14.77 கோடியில் சர்வதேச விளையாட்டரங்கம் : ஆட்சியர் ஆய்வு
வியாழன் 24, ஏப்ரல் 2025 4:11:50 PM (IST)

உதவியாளர் - டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் தகவல்!
வியாழன் 24, ஏப்ரல் 2025 12:27:53 PM (IST)

நெல்லையில் ஆசிரியர்கள் போராட்டம் : பிளஸ் 1, பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி முடங்கியது
புதன் 23, ஏப்ரல் 2025 4:39:07 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் மத்திய அரசின் வளர்ச்சி திட்ட பணிகள் கண்காணிப்புக்கூட்டம்!
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 4:17:05 PM (IST)

மேற்கு தொடர்ச்சி மலை சுற்றுலா பகுதிகளில் 28 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை!
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 8:36:28 AM (IST)
