» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடி மாநகராட்சியுடன் கோராம்பள்ளம் பஞ்சாயத்தை இணைக்க மக்கள் எதிர்ப்பு!
திங்கள் 30, செப்டம்பர் 2024 3:46:39 PM (IST)

கோரம்பள்ளம் பஞ்சாயத்தை தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்க கூடாது என்று ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோரம்பள்ளம் பஞ்சாயத்தற்கு உட்பட்ட கோ.சுப்பிரமணியபுரம், வடக்கு காலான்கரை, பெரியநாயகிபுரம் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில், "எங்கள் பகுதியில் பெரும்பாலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் வசித்து வருகிறோம். விவசாயம், கூலி வேலை மற்றும் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்து வருகிறாேம்.
கோரம்பள்ளம் பஞ்சாயத்தை தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்க பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அவ்வாறு இணைத்தால் 100 நாள் வேலை பறிபோய்விடும். எங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆகிவிடும். வீட்டு வாடகை உயரும். இதனால் மக்கள் பல சிரமத்திற்கு ஆாளாக நேரிடும். எனவே கோரம்பள்ளம் பஞ்சாயத்தை தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்க கூாது என்று மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
மக்கள் கருத்து
சீ.அ.சுகுமாரன்.Sep 30, 2024 - 09:21:09 PM | Posted IP 172.7*****
இவர்கள் பலநூறு நாட்கள் வேலை பார்த்தும் சம்பளம் வாங்கும் ஒரு வேலையைத்தவிர வேறு எந்த வேலையும் செய்த்தாகத் தெரியவில்லையே?
மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி வளாகத்தில் கார் மோதி 4 வயது சிறுமி பலி: மென்பொருள் பொறியாளர், நண்பர் கைது!
வியாழன் 26, மார்ச் 2026 8:41:00 AM (IST)

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ஆம் தேதி நெல்லையில் மதுக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
புதன் 25, மார்ச் 2026 5:48:47 PM (IST)

இராணுவத்தில் சேர இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு : அக்னிபாத் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
செவ்வாய் 24, மார்ச் 2026 5:14:50 PM (IST)

டிரான்ஸ்பார்மர்கள் திருடிய லாரி ஓட்டுநர் உட்பட 4 பேர் கைது!
செவ்வாய் 24, மார்ச் 2026 8:29:29 AM (IST)

திருநெல்வேலி மையத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் : பொதுப் பார்வையாளர்கள் - ஆட்சியர் ஆய்வு!
திங்கள் 23, மார்ச் 2026 4:48:07 PM (IST)

நெல் கொள்முதல் நிலையங்களைக் கண்காணிக்கச் சிறப்பு குழு: ஆட்சியர் தகவல்!
திங்கள் 23, மார்ச் 2026 4:38:08 PM (IST)


அறம் செய்ய விரும்புOct 2, 2024 - 09:52:37 PM | Posted IP 172.7*****