» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடி மாநகராட்சியுடன் கோராம்பள்ளம் பஞ்சாயத்தை இணைக்க மக்கள் எதிர்ப்பு!
திங்கள் 30, செப்டம்பர் 2024 3:46:39 PM (IST)

கோரம்பள்ளம் பஞ்சாயத்தை தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்க கூடாது என்று ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோரம்பள்ளம் பஞ்சாயத்தற்கு உட்பட்ட கோ.சுப்பிரமணியபுரம், வடக்கு காலான்கரை, பெரியநாயகிபுரம் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில், "எங்கள் பகுதியில் பெரும்பாலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் வசித்து வருகிறோம். விவசாயம், கூலி வேலை மற்றும் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்து வருகிறாேம்.
கோரம்பள்ளம் பஞ்சாயத்தை தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்க பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அவ்வாறு இணைத்தால் 100 நாள் வேலை பறிபோய்விடும். எங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆகிவிடும். வீட்டு வாடகை உயரும். இதனால் மக்கள் பல சிரமத்திற்கு ஆாளாக நேரிடும். எனவே கோரம்பள்ளம் பஞ்சாயத்தை தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்க கூாது என்று மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
மக்கள் கருத்து
சீ.அ.சுகுமாரன்.Sep 30, 2024 - 09:21:09 PM | Posted IP 172.7*****
இவர்கள் பலநூறு நாட்கள் வேலை பார்த்தும் சம்பளம் வாங்கும் ஒரு வேலையைத்தவிர வேறு எந்த வேலையும் செய்த்தாகத் தெரியவில்லையே?
மேலும் தொடரும் செய்திகள்

மக்காச்சோளத்தில் விஷம் வைத்து 50 மயில்கள் சாகடிப்பு : விவசாயி கைது!
ஞாயிறு 26, அக்டோபர் 2025 1:52:16 PM (IST)

நெல்லை சரகத்தில் 8 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் திடீர் மாற்றம்: டி.ஐ.ஜி. சந்தோஷ் ஹடிமணி உத்தரவு
ஞாயிறு 26, அக்டோபர் 2025 1:45:38 PM (IST)

வீட்டில் அத்துமீறி நுழைந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை : வன ஊழியர் கைது!
ஞாயிறு 26, அக்டோபர் 2025 1:44:07 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் விட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம்: ஆட்சியர் தகவல்!
சனி 25, அக்டோபர் 2025 4:18:40 PM (IST)

நெல்லையில் பெண் பயணியை அவதூறாக பேசிய அரசு பஸ் டிரைவர் பணி இடைநீக்கம்
சனி 25, அக்டோபர் 2025 8:36:18 AM (IST)

கனிம வளத்துறை உதவி இயக்குனர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை!
வெள்ளி 24, அக்டோபர் 2025 12:06:49 PM (IST)





அறம் செய்ய விரும்புOct 2, 2024 - 09:52:37 PM | Posted IP 172.7*****