» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடி மாநகராட்சியுடன் கோராம்பள்ளம் பஞ்சாயத்தை இணைக்க மக்கள் எதிர்ப்பு!
திங்கள் 30, செப்டம்பர் 2024 3:46:39 PM (IST)

கோரம்பள்ளம் பஞ்சாயத்தை தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்க கூடாது என்று ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோரம்பள்ளம் பஞ்சாயத்தற்கு உட்பட்ட கோ.சுப்பிரமணியபுரம், வடக்கு காலான்கரை, பெரியநாயகிபுரம் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில், "எங்கள் பகுதியில் பெரும்பாலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் வசித்து வருகிறோம். விவசாயம், கூலி வேலை மற்றும் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்து வருகிறாேம்.
கோரம்பள்ளம் பஞ்சாயத்தை தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்க பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அவ்வாறு இணைத்தால் 100 நாள் வேலை பறிபோய்விடும். எங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆகிவிடும். வீட்டு வாடகை உயரும். இதனால் மக்கள் பல சிரமத்திற்கு ஆாளாக நேரிடும். எனவே கோரம்பள்ளம் பஞ்சாயத்தை தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்க கூாது என்று மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
மக்கள் கருத்து
சீ.அ.சுகுமாரன்.Sep 30, 2024 - 09:21:09 PM | Posted IP 172.7*****
இவர்கள் பலநூறு நாட்கள் வேலை பார்த்தும் சம்பளம் வாங்கும் ஒரு வேலையைத்தவிர வேறு எந்த வேலையும் செய்த்தாகத் தெரியவில்லையே?
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயிலில் திடீர் புகை: பயணிகள் அதிர்ச்சி!
புதன் 9, ஜூலை 2025 11:16:50 AM (IST)

நாங்குநேரி உட்பட 4 சுங்கச் சாவடிகளில் அரசு பஸ்களுக்கு தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு
புதன் 9, ஜூலை 2025 10:27:39 AM (IST)

வீடு புகுந்து மூதாட்டியை கொன்று 14 பவுன் நகை கொள்ளை: மர்மநபர்கள் வெறிச்செயல்
புதன் 9, ஜூலை 2025 9:02:53 AM (IST)

நெல்லையப்பர் கோயில் ஆனித்திருவிழா தேரோட்டம்: திருநெல்வேலியில் கோலாகலம்
செவ்வாய் 8, ஜூலை 2025 11:39:30 AM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை; முதியவருக்கு ஆயுள் தண்டனை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 8, ஜூலை 2025 7:53:08 AM (IST)

மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ரூ.18.66 இலட்சம் நலதிட்ட உதவிகள்: ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 7, ஜூலை 2025 5:04:07 PM (IST)

அறம் செய்ய விரும்புOct 2, 2024 - 09:52:37 PM | Posted IP 172.7*****