» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
உலக இருதய தின விழிப்புணர்வு பேரணி : ஆட்சியர் கார்த்திகேயன் துவக்கி வைத்தார்!
திங்கள் 30, செப்டம்பர் 2024 4:08:46 PM (IST)

திருநெல்வேலியில் உலக இருதய தின விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனையில் உலக இருதய தினத்தை முன்னிட்டு இன்று நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ரேவதி முன்னிலையில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இதய ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை உலகெங்கிலும் உள்ள மக்களுக்குப் புரிந்துகொள்வதற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உலக இதய தினம் என்பது ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29 அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதய நோய் மற்றும் இருதய நோய்களை நிர்வகிப்பதற்கான அதன் தடுப்பு நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த உலகளவில் பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதன் மூலம் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
இருதயம் சார்ந்து செயல்படுங்கள் என்ற கருப்பொருளுடன் இந்த ஆண்டுக்கான இருதய விழிப்புணர்வு நாள் கொண்டாடப்படுகிறது. இதயம் மனித உடலின் முக்கிய உறுப்புகளில் ஒன்றாகும், அதன் செயலிழப்பு மரணத்திற்கு வழிவகுக்கும், எனவே ஒவ்வொருவரும் இதய ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வது மிகவும் அவசியம். இருதய ஆரோக்கியம் மற்றும் சில வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் பற்றிய விழிப்புணர்வு இல்லாததால், இருதய நோய்கள் (CVDs) உலகளவில் இறப்புக்கான முக்கிய காரணங்களாகும். மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் கரோனரி இதய நோய் ஆகியவை இருதயக் கோளாறுகளால் ஏற்படும் இறப்புகளுக்கு மிகவும் பொதுவான காரணங்களில் ஒன்றாகும்.
மேலும், இதயம் தொடர்பான நோய்களைத் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் ஆரோக்கியமான வாழ்க்கையினை பொதுமக்கள் பின்பற்ற ஊக்குவிக்கும் வகையில் சுமார் 150-க்கும் மேற்பட்ட அரசு செவிலியர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் மூலம் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியவாறு பேரணியானது அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையிலிருந்து துவங்கி, பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வரை சென்று விழிப்புணர்வு பேரணி நிறைவு பெற்றது. நிகழ்ச்சியில், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆளுநரிடம் இருந்து பட்டம் பெற மறுத்த மாணவிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
புதன் 7, ஜனவரி 2026 11:08:37 AM (IST)

மாணவி குறித்து சமூகவலைதளங்களில் அவதூறு: அரசு கல்லூரி பெண் முதல்வர்,கணவருடன் கைது
புதன் 7, ஜனவரி 2026 8:09:34 AM (IST)

சர்வதேச ஜவுளி தொழில் மாநாட்டில் கண்காட்சி அரங்குகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 6, ஜனவரி 2026 3:53:57 PM (IST)

திமுக அரசை கண்டித்து அங்கன்வாடி ஊழியர்கள் சாலை மறியல்: நெல்லையில் 401 பேர் கைது!
செவ்வாய் 6, ஜனவரி 2026 3:47:24 PM (IST)

சிறுமியை கர்ப்பமாக்கிய தந்தைக்கு தூக்கு தண்டனை : சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
செவ்வாய் 6, ஜனவரி 2026 8:35:18 AM (IST)

திருநெல்வேலியில் 1873 கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி: சபாநாயகர் மு.அப்பாவு வழங்கினார்!
திங்கள் 5, ஜனவரி 2026 8:36:39 PM (IST)

