» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
ஆட்டோ மீது மினி லாரி மோதல்: 11 பேர் காயம்!
வெள்ளி 4, அக்டோபர் 2024 8:37:05 AM (IST)
குலசேகரன்பட்டினம் அருகே லோடு ஆட்டோ - மினி லாரி மோதிய விபத்தில் பக்தர்கள் 11 பேர் காயமடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயிலுக்கு செக்காரக்குடி கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள் நேற்று லோடு ஆட்டோவில் வந்து கொடியேற்ற நிகழ்வில் பங்கேற்றுவிட்டு மாலையில் திருச்செந்தூர் சாலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
உடன்குடி அனல்மின் நிலையம் அருகே முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் சென்றபோது எதிரே வந்த மினி லாரி மீது லோடு ஆட்டோ மோதியது. இதில் ஆட்டோவில் இருந்த 11 பேரும் காயமடைந்து, திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்றனர். இவர்களில் 3 பேர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வீடு புகுந்து மூதாட்டியை கொன்று 14 பவுன் நகை கொள்ளை: மர்மநபர்கள் வெறிச்செயல்
புதன் 9, ஜூலை 2025 9:02:53 AM (IST)

நெல்லையப்பர் கோயில் ஆனித்திருவிழா தேரோட்டம்: திருநெல்வேலியில் கோலாகலம்
செவ்வாய் 8, ஜூலை 2025 11:39:30 AM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை; முதியவருக்கு ஆயுள் தண்டனை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 8, ஜூலை 2025 7:53:08 AM (IST)

மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ரூ.18.66 இலட்சம் நலதிட்ட உதவிகள்: ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 7, ஜூலை 2025 5:04:07 PM (IST)

வேலைவாய்ப்பு முகாமில் 5300 பேருக்கு பணிநியமன ஆணைகள் : சபாநாயகர், அமைச்சர்கள் வழங்கினர்!
சனி 5, ஜூலை 2025 5:44:29 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் 132 மையங்களில் 36,011 பேர் குரூப் 4 தேர்வு தேர்வு எழுதுகிறார்கள்!
வெள்ளி 4, ஜூலை 2025 5:51:49 PM (IST)
