» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து சீரானதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!
திங்கள் 28, அக்டோபர் 2024 8:16:48 AM (IST)
குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து சீரானதால் சுற்றுலா பயணிகள், அய்யப்ப பக்தர்கள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த தொடர் மழையால் குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் பழைய குற்றாலம் அருவியில் மட்டும் சுற்றுலா பயணிகளை குளிக்க அனுமதித்தனர்.
நேற்று குற்றாலம் சுற்று வட்டார பகுதிகளில் வெயில் அடித்தது. அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து குறைந்து சீராக விழுந்தது. இதனால் அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலா பயணிகள், அய்யப்ப பக்தர்கள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு வாகன பிரச்சாரம், பேரணி: ஆட்சியர் தொடங்கி வைத்தார்
வியாழன் 23, அக்டோபர் 2025 4:02:33 PM (IST)

தென்காசி மாவட்டத்திற்கு அக்.29,30 தேதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணம்!
வியாழன் 23, அக்டோபர் 2025 3:28:48 PM (IST)

கனிமவள கொள்ளையில் ஆளுங்கட்சியினருக்கு தொடர்பு: அன்புமணி குற்றச்சாட்டு!
வியாழன் 23, அக்டோபர் 2025 3:07:40 PM (IST)

ஆலங்குளம் திமுக பேரூராட்சி தலைவி தகுதி நீக்கம்: சொத்துவரி தாமதமாக செலுத்தியதால் அதிரடி!
வியாழன் 23, அக்டோபர் 2025 8:38:04 AM (IST)

நெல்லை முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா தொடங்கியது : வருகிற 27-ஆம் தேதி சூரசம்ஹாரம்!
வியாழன் 23, அக்டோபர் 2025 8:35:20 AM (IST)

எழும்பூர்-நெல்லை இடையே சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
புதன் 22, அக்டோபர் 2025 11:18:02 AM (IST)
