» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
வைரக்கல் இருப்பதாக பாறை உடைப்பு: ஜேசிபி ஆபரேட்டர் கைது
வெள்ளி 8, நவம்பர் 2024 12:32:47 PM (IST)
ஏர்வாடி அருகே வைரக்கல் இருப்பதாகக் கூறி குளத்து பாறையை உடைத்த ஜேசிபி ஆபரேட்டரை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் கருத்தானேரி குளத்தில் ஆங்காங்கே சின்ன சின்ன பாறைகள் உள்ளன. அவற்றில் வைரக்கல் இருப்பதாக கூறி மர்ம நபர்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் பாறையை உடைத்துக் கொண்டிருந்தனர். இது தொடர்பாக அந்த பகுதியைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் முருகம்மாள் ஏர்வாடி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில், போலீசார் குளத்திற்கு சென்றனர். அவர்களைப் பார்த்ததும் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். பொக்லைன் ஆபரேட்டர் மட்டும் போலீசாரிடம் சிக்கினார். விசாரணையில் அவர் மதுரை அருகேயுள்ள உசிலம்பட்டியைச் சேர்ந்த ராஜாராம் மகன் கணேசன்(23) எனத் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து, பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சுங்கச்சாவடியில் டிரைவர், கண்டக்டர்களிடம் கையெழுத்து வாங்கி அரசு பஸ்களை அனுமதித்த ஊழியர்கள்
வெள்ளி 11, ஜூலை 2025 8:22:12 AM (IST)

குழந்தைகள் இல்லத்தில் கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பலி: முதல்வர் நிவாரணம் அறிவிப்பு
வியாழன் 10, ஜூலை 2025 5:06:20 PM (IST)

படகுகளில் தவெக பெயர் இருந்தால் மானியம் மறுப்பதா? திமுக அரசுக்கு விஜய் கண்டனம்!
வியாழன் 10, ஜூலை 2025 3:50:04 PM (IST)

புனித பயணம் மேற்கொள்ள தமிழக அரசு நிதி உதவி : விண்ணப்பங்கள் வரவேற்பு
வியாழன் 10, ஜூலை 2025 3:15:25 PM (IST)

நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயிலில் திடீர் புகை: பயணிகள் அதிர்ச்சி!
புதன் 9, ஜூலை 2025 11:16:50 AM (IST)

நாங்குநேரி உட்பட 4 சுங்கச் சாவடிகளில் அரசு பஸ்களுக்கு தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு
புதன் 9, ஜூலை 2025 10:27:39 AM (IST)
