» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
வைரக்கல் இருப்பதாக பாறை உடைப்பு: ஜேசிபி ஆபரேட்டர் கைது
வெள்ளி 8, நவம்பர் 2024 12:32:47 PM (IST)
ஏர்வாடி அருகே வைரக்கல் இருப்பதாகக் கூறி குளத்து பாறையை உடைத்த ஜேசிபி ஆபரேட்டரை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் கருத்தானேரி குளத்தில் ஆங்காங்கே சின்ன சின்ன பாறைகள் உள்ளன. அவற்றில் வைரக்கல் இருப்பதாக கூறி மர்ம நபர்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் பாறையை உடைத்துக் கொண்டிருந்தனர். இது தொடர்பாக அந்த பகுதியைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் முருகம்மாள் ஏர்வாடி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில், போலீசார் குளத்திற்கு சென்றனர். அவர்களைப் பார்த்ததும் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். பொக்லைன் ஆபரேட்டர் மட்டும் போலீசாரிடம் சிக்கினார். விசாரணையில் அவர் மதுரை அருகேயுள்ள உசிலம்பட்டியைச் சேர்ந்த ராஜாராம் மகன் கணேசன்(23) எனத் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து, பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு பள்ளியில் மாணவர்களுக்கிடையே கோஷ்டி மோதல் : 13 பேர் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு!
திங்கள் 15, செப்டம்பர் 2025 8:35:27 PM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 5:37:43 PM (IST)

வாரச்சந்தையில் பயங்கர தீ விபத்து: ரூ.9 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 5:35:42 PM (IST)

ஆட்டோக்களின் அதிக கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்த வேண்டும்: ஆர்டிஓவிடம் கோரிக்கை!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 10:26:08 AM (IST)

நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை இயக்கக்கூடாது: மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையால் பரபரப்பு
வெள்ளி 12, செப்டம்பர் 2025 8:42:46 AM (IST)

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி: முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு!
வியாழன் 11, செப்டம்பர் 2025 3:46:38 PM (IST)
