» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
வைரக்கல் இருப்பதாக பாறை உடைப்பு: ஜேசிபி ஆபரேட்டர் கைது
வெள்ளி 8, நவம்பர் 2024 12:32:47 PM (IST)
ஏர்வாடி அருகே வைரக்கல் இருப்பதாகக் கூறி குளத்து பாறையை உடைத்த ஜேசிபி ஆபரேட்டரை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் கருத்தானேரி குளத்தில் ஆங்காங்கே சின்ன சின்ன பாறைகள் உள்ளன. அவற்றில் வைரக்கல் இருப்பதாக கூறி மர்ம நபர்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் பாறையை உடைத்துக் கொண்டிருந்தனர். இது தொடர்பாக அந்த பகுதியைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் முருகம்மாள் ஏர்வாடி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில், போலீசார் குளத்திற்கு சென்றனர். அவர்களைப் பார்த்ததும் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். பொக்லைன் ஆபரேட்டர் மட்டும் போலீசாரிடம் சிக்கினார். விசாரணையில் அவர் மதுரை அருகேயுள்ள உசிலம்பட்டியைச் சேர்ந்த ராஜாராம் மகன் கணேசன்(23) எனத் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து, பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கொலை முயற்சி, வழிப்பறியில் ஈடுபட்டவர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது!
வெள்ளி 14, நவம்பர் 2025 5:31:34 PM (IST)

கூத்தன்குழியில் நவ.21ல் கடலம்மா மாநாடு : சீமான் அறிவிப்பு
வியாழன் 13, நவம்பர் 2025 4:29:46 PM (IST)

தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தேரோட்டம் கோலாகலம்
வியாழன் 13, நவம்பர் 2025 12:44:11 PM (IST)

மதுவில் விஷம் கலந்து கொடுத்து பள்ளி ஆசிரியர் கொலை : பெண் உட்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை
புதன் 12, நவம்பர் 2025 5:50:21 PM (IST)

நெல்லை வருகை தந்த ஆடவர் ஹாக்கி இளையோர் உலக கோப்பைக்கு உற்சாக வரவேற்பு
புதன் 12, நவம்பர் 2025 4:33:40 PM (IST)

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு தர்மஅடி: பாளையங்கோட்டையில் பரபரப்பு!
புதன் 12, நவம்பர் 2025 8:43:51 AM (IST)




