» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பத்து ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை: அரசு எச்சரிக்கை!
புதன் 27, நவம்பர் 2024 11:27:38 AM (IST)
அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்து ரூபாய் நாணயத்தை அவமதிக்கும் வகையில் நாணயத்தை வாங்க மறுப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் பொதுமக்களின் புழக்கத்தில் பத்து ரூபாய் நாணயங்கள் இருந்து வருகின்றது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்து ரூபாய் நாணயங்கள் செல்லாது என பொதுமக்கள் மத்தியில் பரவலாக எண்ணம் உள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி பல்வேறு அறிக்கைகளை அளித்த போதும் பத்து ரூபாய் நாணயம் செல்லாது என்ற தவறான தகவல் பொதுமக்களிடையே பரவிய வண்ணம் உள்ளது. சில நிறுவனங்கள், பேருந்துகளில், கடைகளில் பத்து ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பதாக தகவல்கள் வருகின்றன.
இவ்வாறு அரசு அங்கீகரித்த நாணயத்தை பணப்பரிமாற்றத்தின் போது வாங்க மறுப்பதோ அல்லது செல்லாது என கூறுவதோ சட்டப்படி குற்றமாகும். எனவே, ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட பத்து ரூபாய் நாணயங்களை அவமதிக்கும் வகையில், நாணயத்தை வாங்க மறுக்கும் நபர் அல்லது கடை உரிமையாளர், எரிபொருள் நிலைய உரிமையாளர், வங்கி அலுவலர் மற்றும் பேருந்து நடத்துனர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பொருநை அருங்காட்சியகத்திற்கு பேருந்துகள் இயக்கம் - ஆட்சியர் சுகுமார் தகவல்
செவ்வாய் 23, டிசம்பர் 2025 10:38:30 AM (IST)

பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட நாளை முதல் அனுமதி: கட்டணம் நிர்ணயம்!
திங்கள் 22, டிசம்பர் 2025 8:01:26 PM (IST)

திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் சுகுமார் பங்கேற்பு
திங்கள் 22, டிசம்பர் 2025 5:31:58 PM (IST)

ஆட்சி மாற்றத்துக்காக பிரசாரம் செய்வேன்: நெல்லையில் சரத்குமார் பேட்டி
திங்கள் 22, டிசம்பர் 2025 4:42:33 PM (IST)

காடுவெட்டி மெயின் ரோட்டில் இளைஞர் உயிரிழந்த சம்பவம்: காவல் துறை தீவிர விசாரணை!
திங்கள் 22, டிசம்பர் 2025 11:06:43 AM (IST)

திராவிட மாடல் 2.0 ஆட்சியில் இன்னும் பல மகத்தான திட்டங்கள் வரப்போகிறது: முதல்வர் ஸ்டாலின் பேச்சு
திங்கள் 22, டிசம்பர் 2025 8:28:25 AM (IST)

