» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடி ஆட்டோ ஓட்டுனருக்கு எடப்பாடியார் ரூ.1லட்சம் நிதி உதவி!
வெள்ளி 29, நவம்பர் 2024 8:04:10 AM (IST)

தூத்துக்குடியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனருக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ரூ.1லட்சம் நிதி உதவியை வழங்கினார்.
தூத்துக்குடியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அய்யப்பன் வாடகைக்கு ஆட்டோ எடுத்து தொழில் செய்து வந்துள்ளார். தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கத்திலும் பொறுப்பாளராக செயல்பட்டும் வந்துள்ளார். இவரது குடும்ப சூழ்நிலையை மனதில் கொண்டு தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் சண்முகநாதன் பரிந்துரையின் பெயரில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்கள் வழங்கி வரும் நலிந்த தொழிலாளர்களுக்கான நிதி உதவியின் கீழ் தூத்துக்குடி ஆட்டோ ஓட்டுநர் அய்யப்பனை நேரில் வரவழைத்து ₹1,00,000/- ரூபாய் நிதி உதவியை வழங்கி உதவியுள்ளனர்.
ஆட்டோ ஓட்டுநர் இதையையே முன் பணமாக வைத்து தனது பெயரில் சொந்தமாக ஓர் ஆட்டோ எடுத்து தற்போது அதன் மூலமாக தொழில் செய்து வருகிறார். அதிமுக சார்பாக வழங்கப்பட்டுள்ள இந்த நிதி உதவியை தூத்துக்குடி ஆட்டோ ஓட்டுநர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இதற்கு காரணமாக இருந்த மாவட்ட செயலாளர் சண்முகநாதனுக்கும் வாழ்த்துக்கள் குவிந்த வன்னம் உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெற்ற மகளை கர்ப்பமாக்கிய தந்தைக்கு தூக்கு தண்டனை : போக்சோ நீதிமன்றம்அதிரடி தீர்ப்பு
வியாழன் 25, டிசம்பர் 2025 8:52:42 AM (IST)

தென்காசியில் மட்டும் அக்னிபாத் திட்டத்தின் மூலம் 300 வீரர்கள் ராணுவத்திற்கு தேர்வு..!!
புதன் 24, டிசம்பர் 2025 11:59:50 AM (IST)

பொருநை அருங்காட்சியகத்தினை பார்வையிட பொதுமக்கள் ஆர்வம்!
செவ்வாய் 23, டிசம்பர் 2025 5:10:11 PM (IST)

கால்நடைகளுக்கான தடுப்பூசி பணி டிசம்பர் 29-ஆம் தேதி தொடக்கம் - ஆட்சியர் தகவல்
செவ்வாய் 23, டிசம்பர் 2025 3:57:52 PM (IST)

பொருநை அருங்காட்சியகத்திற்கு பேருந்துகள் இயக்கம் - ஆட்சியர் சுகுமார் தகவல்
செவ்வாய் 23, டிசம்பர் 2025 10:38:30 AM (IST)

பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட நாளை முதல் அனுமதி: கட்டணம் நிர்ணயம்!
திங்கள் 22, டிசம்பர் 2025 8:01:26 PM (IST)


சங்கர பாண்டியன்Nov 29, 2024 - 03:04:49 PM | Posted IP 172.7*****