» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடியில் பெண் மருத்துவர் மீது தாக்குதல் : கணவர் கைது
வெள்ளி 29, நவம்பர் 2024 4:43:55 PM (IST)
தூத்துக்குடியில் தனியார் மருத்துவமனைக்குள் புகுந்து பெண் மருத்துவரை தாக்கிய அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி பக்கிள்புரம் 2வது தெருவைச் சேர்ந்தவர் ஜெயசீலன் மகன் டேனியல்ராஜ் (36). இவர் பாத்திமா நகரைச் சேர்ந்த ரேவதி (35) என்ற பெண்ணை கடந்த 2022ல் காதல் திருமணம் செய்து கொண்டார். ரேவதி, பிரையன்ட் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணி புரிந்து வருகிறார்.
குடும்ப பிரச்சனை காரணமாக கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில் நேற்று ரேவதி மருத்துவமனையில் பணி செய்து கொண்டிருந்த போது மதுபோதையில் டேனியல்ராஜ், அங்கு சென்று தகராறு செய்து அவரை கையால் தாக்கினாராம். இதுகுறித்து தென்பாகம் காவல் நிலையத்தில் ரேவதி அளித்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் முத்தமழரசன் வழக்குப் பதிந்து டேனியல் ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 4 பெட்டிகள் இணைப்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:10:26 PM (IST)

முத்தூர் ஊராட்சியில் புதிய தொழில் பேட்டை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 3:25:13 PM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 7 ஆண்டு சிறை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 8:23:31 AM (IST)

அரசு பள்ளியில் மாணவர்களுக்கிடையே கோஷ்டி மோதல் : 13 பேர் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு!
திங்கள் 15, செப்டம்பர் 2025 8:35:27 PM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 5:37:43 PM (IST)

வாரச்சந்தையில் பயங்கர தீ விபத்து: ரூ.9 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 5:35:42 PM (IST)
