» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
வாட்ஸ்அப் மூலம் திமிங்கல உமிழ்நீரை ரூ.5 லட்சத்திற்கு விற்க முயற்சி : 3 பேர் கைது
ஞாயிறு 8, டிசம்பர் 2024 9:42:06 AM (IST)
விக்கிரமசிங்கபுரம் அருகே வாட்ஸ்அப் மூலம் திமிங்கல உமிழ்நீரை ரூ.5 லட்சத்திற்கு விற்க முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை மாவட்டம் களக்காடு- முண்டந்துறை புலிகள் காப்பகம் பாபநாசம் வனச்சரகத்திற்கு உட்பட்ட விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள அகஸ்தியர்பட்டி பகுதியில் திமிங்கலத்தின் உமிழ்நீரை சிலர் கடத்தி வந்து விற்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அம்பை துணை இயக்குனர் இளையராஜா உத்தரவின் பேரில் பாபநாசம் வனச்சரகத்தினர் அகஸ்தியர்பட்டி பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு 3 பேர் சந்தேகிக்கும் வகையில் நின்று கொண்டு இருந்தனர். அவர்களை பிடித்து விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவர்கள் 3 பேரும் அம்பை மேலப்பாளையம் தெருவைச் சேர்ந்த இசக்கி பாண்டி மகன் செல்வம், வீரவநல்லூர் ரெயில்வே பீடர் ரோடு மைக்கேல் மகன் சவரிதாசன், அம்பை அம்மன் சன்னதி தெரு சுப்பையா மகன் பரமசிவன் என்பது தெரியவந்தது.
மேலும் அவர்கள் வாட்ஸ்-அப் மூலம் திமிங்கல உமிழ்நீரை ரூ.5 லட்சத்திற்கு விற்க இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அகஸ்தியர்பட்டி பகுதியில் அவர்கள் தங்கியிருந்த வாடகை வீட்டில் இருந்து 2¾ கிலோ எடை கொண்ட திமிங்கல உமிழ்நீர் கட்டிகளையும், காகித பையில் இருந்த துகள்களையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் 3 பேரையும் கைது செய்து அம்பை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவிலில் வாலிபரை வெட்டிக்கொன்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை நெல்லை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
புதன் 17, செப்டம்பர் 2025 8:33:36 AM (IST)

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 4 பெட்டிகள் இணைப்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:10:26 PM (IST)

முத்தூர் ஊராட்சியில் புதிய தொழில் பேட்டை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 3:25:13 PM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 7 ஆண்டு சிறை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 8:23:31 AM (IST)

அரசு பள்ளியில் மாணவர்களுக்கிடையே கோஷ்டி மோதல் : 13 பேர் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு!
திங்கள் 15, செப்டம்பர் 2025 8:35:27 PM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 5:37:43 PM (IST)
