» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கத்தின் புதிய கட்டிட திறப்பு விழா

புதன் 19, மார்ச் 2025 10:33:26 AM (IST)



கோவில்பட்டியில் வழக்கறிஞர் சங்கத்தின் புதிய கட்டிடத்தினை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி வசந்தி திறந்து வைத்தார்.

தூத்துக்குடி  மாவட்டம் கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கத்தின் புதிய கட்டிட திறப்பு விழா மற்றும் கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இணைந்து நடத்தும் புத்தகக்கண்காட்சி நடைபெற்றது. இந்த நிகழச்சிக்கு கோவில்பட்டி வழக்கறிஞர் சங்க தலைவர் சங்கர் கணேஷ் தலைமை வகித்தார். 

கோவில்பட்டி வழக்கறிஞர் சங்க செயலாளர் ஜெயசீலன், துணைத்தலைவர் சிவன்பாண்டி, பொருளாளர் ரேவதி, துணைச் செயலாளர் முனீஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிய கட்டிடத்தினை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி வசந்தி திறந்து வைத்து, புத்தகக் கண்காட்சியையும் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் சார்பு நீதிமன்ற நீதிபதி மாரிக்காளை, மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி கருப்பசாமி, விரைவு நீதிமன்ற நீதிபதி பாஸ்கரன், குற்றவியல் நடுவர் எண் : 1 - நீதிமன்ற நீதிபதி கடற்கரை செல்வம், குற்றவியல நடுவர் எண் : 2- நீதிமன்ற நீதிபதி பீட்டர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். அரசு வழக்கறிஞர் சம்பத்குமார், மூத்த வழக்கறிஞர்கள், சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

GM SANKAR GANESHMar 21, 2025 - 03:02:14 PM | Posted IP 162.1*****

நன்றி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory