» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
முன்னாள் சப்-இன்ஸ்பெக்டர் படுகொலை விவகாரம்: போலீஸ் உதவி கமிஷனரும் பணியிடை நீக்கம்!
வெள்ளி 21, மார்ச் 2025 8:38:50 AM (IST)
நெல்லை முன்னாள் சப்-இன்ஸ்பெக்டர் படுகொலை விவகாரத்தில் உதவி கமிஷனர் மீதும் பணி இடைநீக்க நடவடிக்கையை தமிழக அரசு எடுத்துள்ளது.
நெல்லையில் வக்பு வாரியத்துக்கு சொந்தமான சொத்துகளை அபகரிக்க முயன்றதாக கிருஷ்ணமூர்த்தி என்ற தவுபிக் மீது நெல்லை டவுன் போலீசில் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் பிஜிலி புகார் அளித்திருந்தார். மேலும் அவர், தவுபிக்கிடம் இருந்து தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும் ‘வீடியோ' பதிவு வெளியிட்டு இருந்தார்.
போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில், ஜாகீர் உசேன் பிஜிலி கடந்த 18-ந்தேதி அன்று படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய தவுபிக்கை துப்பாக்கியால் சுட்டு போலீசார் பிடித்தனர். 2 பேர் கோர்ட்டில் சரணடைந்தனர்.
ஜாகீர் உசேன் பிஜிலி அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக செயல்பட்ட காரணத்துக்காக நெல்லை டவுன் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலித்தது. இதைத் தொடர்ந்து அவரை பணி இடைநீக்கம் செய்து நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹடிமணி உத்தரவிட்டார்.
ஜாகீன் உசேன் பிஜிலி புகார் அளித்த சமயத்தில் நெல்லை டவுன் உதவி கமிஷனராக பணியாற்றிய செந்தில்குமார் மீதும் துறைரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதன்பேரில் தற்போது கோவை நுண்ணறிவு பிரிவில் உதவி கமிஷனராக பணியாற்றி வரும் செந்தில்குமார் மீதும் பணி இடைநீக்க (சஸ்பெண்டு) நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்து உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேவாலய நுழைவுவாயில் கட்டுவதில் மோதல்: 6 பேர் மீது வழக்குப்பதிவு; வீடியோ வைரல்!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 8:26:34 PM (IST)

திருநெல்வேலி வாக்குச்சாவடி மையங்களில் ஆட்சியர் சுகுமார் ஆய்வு!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 5:31:21 PM (IST)

வங்கியில் தீ விபத்து : முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பல்! பணம், நகைகளுக்கு சேதம் இல்லை!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 8:16:58 AM (IST)

நெல்லையில் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை: கணித ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 8:11:14 AM (IST)

சட்டமன்ற பொதுத்தேர்தல் முன்னேற்பாடு பணிகள் ஆலோசனைக் கூட்டம்: ஆட்சியர் பங்கேற்பு
திங்கள் 16, பிப்ரவரி 2026 5:01:46 PM (IST)

நடிகை த்ரிஷா குறித்த பேச்சுக்கு மனப்பூர்வமாக வருத்தம் தெரிவிக்கிறேன்: நயினார் நாகேந்திரன்
திங்கள் 16, பிப்ரவரி 2026 3:42:53 PM (IST)

