» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
முன்னாள் சப்-இன்ஸ்பெக்டர் படுகொலை விவகாரம்: போலீஸ் உதவி கமிஷனரும் பணியிடை நீக்கம்!
வெள்ளி 21, மார்ச் 2025 8:38:50 AM (IST)
நெல்லை முன்னாள் சப்-இன்ஸ்பெக்டர் படுகொலை விவகாரத்தில் உதவி கமிஷனர் மீதும் பணி இடைநீக்க நடவடிக்கையை தமிழக அரசு எடுத்துள்ளது.
நெல்லையில் வக்பு வாரியத்துக்கு சொந்தமான சொத்துகளை அபகரிக்க முயன்றதாக கிருஷ்ணமூர்த்தி என்ற தவுபிக் மீது நெல்லை டவுன் போலீசில் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் பிஜிலி புகார் அளித்திருந்தார். மேலும் அவர், தவுபிக்கிடம் இருந்து தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும் ‘வீடியோ' பதிவு வெளியிட்டு இருந்தார்.
போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில், ஜாகீர் உசேன் பிஜிலி கடந்த 18-ந்தேதி அன்று படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய தவுபிக்கை துப்பாக்கியால் சுட்டு போலீசார் பிடித்தனர். 2 பேர் கோர்ட்டில் சரணடைந்தனர்.
ஜாகீர் உசேன் பிஜிலி அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக செயல்பட்ட காரணத்துக்காக நெல்லை டவுன் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலித்தது. இதைத் தொடர்ந்து அவரை பணி இடைநீக்கம் செய்து நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹடிமணி உத்தரவிட்டார்.
ஜாகீன் உசேன் பிஜிலி புகார் அளித்த சமயத்தில் நெல்லை டவுன் உதவி கமிஷனராக பணியாற்றிய செந்தில்குமார் மீதும் துறைரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதன்பேரில் தற்போது கோவை நுண்ணறிவு பிரிவில் உதவி கமிஷனராக பணியாற்றி வரும் செந்தில்குமார் மீதும் பணி இடைநீக்க (சஸ்பெண்டு) நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்து உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலியில் திருநங்கைகள் தினம் குறைதீர் முகாம் : ஆட்சியர் இரா.சுகுமார் பங்கேற்பு
சனி 26, ஏப்ரல் 2025 4:43:20 PM (IST)

நாங்குநேரி வழக்கறிஞர் சங்கத் தேர்தல் : உயர்நீதிமன்றம் உத்தரவு
சனி 26, ஏப்ரல் 2025 3:26:36 PM (IST)

தடைசெய்யப்பட்ட மையோனைஸ் பயன்படுத்தும் உணவு வியாபாரிகள் மீது நடவடிக்கை: அரசு உத்தரவு!
சனி 26, ஏப்ரல் 2025 12:04:15 PM (IST)

போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை : ஆட்சியர் எச்சரிக்கை
சனி 26, ஏப்ரல் 2025 10:31:17 AM (IST)

நெல்லை - செங்கோட்டை பயணிகள் ரயிலில் கூடுதல் பெட்டிகள்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு!
வெள்ளி 25, ஏப்ரல் 2025 8:24:54 PM (IST)

கள்ளக்காதல் விவகாரத்தில் பெண்குழந்தை கொடூர கொலை: தாய், 3 வாலிபர்கள் கைது
வெள்ளி 25, ஏப்ரல் 2025 7:35:07 PM (IST)
