» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
முன்னாள் சப்-இன்ஸ்பெக்டர் படுகொலை விவகாரம்: போலீஸ் உதவி கமிஷனரும் பணியிடை நீக்கம்!
வெள்ளி 21, மார்ச் 2025 8:38:50 AM (IST)
நெல்லை முன்னாள் சப்-இன்ஸ்பெக்டர் படுகொலை விவகாரத்தில் உதவி கமிஷனர் மீதும் பணி இடைநீக்க நடவடிக்கையை தமிழக அரசு எடுத்துள்ளது.
நெல்லையில் வக்பு வாரியத்துக்கு சொந்தமான சொத்துகளை அபகரிக்க முயன்றதாக கிருஷ்ணமூர்த்தி என்ற தவுபிக் மீது நெல்லை டவுன் போலீசில் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் பிஜிலி புகார் அளித்திருந்தார். மேலும் அவர், தவுபிக்கிடம் இருந்து தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும் ‘வீடியோ' பதிவு வெளியிட்டு இருந்தார்.
போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில், ஜாகீர் உசேன் பிஜிலி கடந்த 18-ந்தேதி அன்று படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய தவுபிக்கை துப்பாக்கியால் சுட்டு போலீசார் பிடித்தனர். 2 பேர் கோர்ட்டில் சரணடைந்தனர்.
ஜாகீர் உசேன் பிஜிலி அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக செயல்பட்ட காரணத்துக்காக நெல்லை டவுன் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலித்தது. இதைத் தொடர்ந்து அவரை பணி இடைநீக்கம் செய்து நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹடிமணி உத்தரவிட்டார்.
ஜாகீன் உசேன் பிஜிலி புகார் அளித்த சமயத்தில் நெல்லை டவுன் உதவி கமிஷனராக பணியாற்றிய செந்தில்குமார் மீதும் துறைரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதன்பேரில் தற்போது கோவை நுண்ணறிவு பிரிவில் உதவி கமிஷனராக பணியாற்றி வரும் செந்தில்குமார் மீதும் பணி இடைநீக்க (சஸ்பெண்டு) நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்து உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அம்பாசமுத்திரம் வட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
செவ்வாய் 1, ஜூலை 2025 12:29:06 PM (IST)

பீகாரில் 20 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தந்தையை மகனிடம் ஒப்படைத்த ஆட்சியர்!!
திங்கள் 30, ஜூன் 2025 4:41:15 PM (IST)

நெல்லையப்பர் கோவில் தேர் திருவிழா: 8ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 4:18:44 PM (IST)

விஷவண்டு கடித்து 2-ம் வகுப்பு மாணவன் சாவு: ஏர்வாடி அருகே பரிதாபம்!
திங்கள் 30, ஜூன் 2025 11:50:02 AM (IST)

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்!
திங்கள் 30, ஜூன் 2025 10:46:39 AM (IST)

குற்றாலத்தில் சீசன் களைகட்டியது: அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்!!
திங்கள் 30, ஜூன் 2025 8:45:44 AM (IST)
