» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மன்னர் தேர்மாறன் தபால் தலை வெளியிட வேண்டும்: பாஜக மாநில துணைத் தலைவரிடம் கோரிக்கை!

சனி 22, மார்ச் 2025 10:25:43 AM (IST)



மாமன்னர் தேர்மாறன் தபால் தலை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநில துணைத் தலைவரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடியில் பாரதிய ஜனதா கட்சி மாநில துணைத் தலைவர் ராம சீனிவாசனை சந்தித்து அனைத்து ஊர் பரத குல ஊர்கமிட்டியினர், தேர் மாறன் மீட்புக் குழு, முத்துக்குளித்துறை பரதநல தலைமை சங்கத்தினர், தமிழ்நாடு வணிகர் நல சங்கத்தினர், குரூஸ் பர்னாந்து மக்கள் மன்றத்தினர், குரூஸ் பர்னாந்து மக்கள் பேரவை நிர்வாகிகள் மனு அளித்தனர.

அதில், இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவரும் 16ஆம் மாமன்னருமான தொன் கபிரியேல் தெக் குரூஸ் வாஸ் கோமஸ் பரத வர்ம பாண்டியன் (என்ற) தேர்மாறன் வரைபட ஓவியத்தை தூத்துக்குடியில் புதிதாக புனரமைக்கப்படும் விமான நிலையத்தில் வைக்க கோரியும், அவரது உருவம் பதித்த தபால் தலை மத்திய அரசால் வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட அவர் இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். 


மக்கள் கருத்து

SivaSriMar 22, 2025 - 11:39:04 AM | Posted IP 172.7*****

விமான நிலையத்தில் பார்த்தேன்.எல்லா புகழ் மிக்க படங்கள் காட்சிகள் கண்டேன்.தூத்துக்குடியின் பெயரை பெருமை மிகச் செய்த தேர்மாறன், தண்ணீர் கொண்டு வந்த சீமான் குரூஸ் ஐயா போன்ற பெயர்கள் சார்ந்து எதுவும் இல்லை என்று அந்த இடத்தை பார்த்த போது தெரிந்தது.இவற்றை மறைக்க நினைக்காதீர்கள்.என்று என் கருத்தாக அல்ல பொது மக்கள் கேட்டதை பதிவிடுகிறேன்.நன்றி duty online.🙏

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory