» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
காக்கும் கரங்கள் திட்டத்தில் பெண்களுக்கு வயது வரம்பு தளர்வு: ஆட்சியர் தகவல்
வெள்ளி 28, மார்ச் 2025 4:42:24 PM (IST)
முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தில் கடனுதவி கோரி விண்ணப்பித்திட முன்னாள் படைவீரர்களை சார்ந்துள்ள பெண்களுக்கு வயது வரம்பு இல்லை என்று மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தெரிவித்துள்ளார்.

தற்போது, முன்னாள் படைவீரர்கள் அவர்தம் விதவையர் மற்றும் அவரைச் சார்ந்துள்ள திருமணமாகாத மகள் / விதவை மகள் மற்றும் படைப்பணியின்போது உயிர்நீத்த படைவீரரின் விதவையர் / அவரைச் சார்ந்துள்ள திருமணமாகாத மகள் / விதவை மகள் ஆகியோருக்கு முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் வாயிலாக கடனுதவி கோரி விண்ணப்பித்திட வயது வரம்பு இல்லை என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முன்னாள் படைவீரர் / விதவையரின் திருமணமாகாத மகனுக்கு அதிக பட்சமாக 25 வயது வரை மட்டுமே இத்திட்டத்தின் வாயிலாக விண்ணப்பித்திட இயலும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் PMEGP / PMFME /UYEGP/NEEDS/AABCS/BLISS/ Schemes under any TAHDCO or under any other Scheme for resettlement through Government of India (or) State Government ஆகிய இத்திட்டங்களில் பலன் பெற்றவர்கள் தகுதியற்றவர்களாவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் / அவர்தம் சார்ந்தோர்கள் மற்றும் படைப்பணியின்போது உயிர்நீத்த படைவீரரின் சார்ந்தோர்கள் இவ்வயது வரம்பு சலுகையினை பயன்படுத்தி இத்திட்டத்தில் கடனுதவி பெற்று பயன்பெறுமாறு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், கேட்டுக்கொண்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 8, மே 2025 3:56:15 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 92.57 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி
வியாழன் 8, மே 2025 12:51:53 PM (IST)

சுற்றுலாதலங்களில் மதி அங்காடி நடத்துவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் தகவல்
வியாழன் 8, மே 2025 11:21:00 AM (IST)

தமிழ்நாட்டில் வெற்றிவேல் வீரவேல் ஆபரேஷன் : நயினார் நாகேந்திரன் பேட்டி
புதன் 7, மே 2025 4:37:46 PM (IST)

தமிழறிஞர் கால்டுவெல் 211-வது பிறந்தநாள் விழா: தமிழக அரசின் சார்பில் ஆட்சியர் மரியாதை!
புதன் 7, மே 2025 12:11:51 PM (IST)

நெல்லை மாநகர் குளங்களில் அமலைச் செடிகள் அகற்றும் பணி: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
செவ்வாய் 6, மே 2025 4:36:31 PM (IST)
