» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை : வாலிபர் போக்சோவில் கைது!
வெள்ளி 28, மார்ச் 2025 8:14:46 PM (IST)
நாங்குநேரி அருகே இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள ராமகிருஷ்ணாபுரம், நடுத்தெருவை சேர்ந்தவர் சுந்தர் (23). இவர் இன்ஸ்டாகிராம் மூலம் பிளஸ் -1 மாணவியிடம் அறிமுகமாகி உள்ளார். தொடர்ந்து மாணவியிடம் சமூக வலைதளங்களில் பேசிவந்த சுந்தர், மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி காதலித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த காதல் விவகாரம் மாணவியின் தாயாருக்கு தெரியவந்ததையடுத்து அவர் கண்டித்துள்ளார். உடனே மாணவி வாலிபரிடம் பேசுவதை நிறுத்தினார். ஆனாலும் சுந்தர் மாணவியை தன்னிடம் பேசுமாறு தொடர்ந்து அவருக்கு தொல்லை கொடுத்துள்ளார். அடிக்கடி அந்த மாணவியை வழிமறித்து தன்னிடம் பேசுமாறு அவர் மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாணவி தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் தாயார் நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சுந்தரை கைது செய்தனர்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 8, மே 2025 3:56:15 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 92.57 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி
வியாழன் 8, மே 2025 12:51:53 PM (IST)

சுற்றுலாதலங்களில் மதி அங்காடி நடத்துவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் தகவல்
வியாழன் 8, மே 2025 11:21:00 AM (IST)

தமிழ்நாட்டில் வெற்றிவேல் வீரவேல் ஆபரேஷன் : நயினார் நாகேந்திரன் பேட்டி
புதன் 7, மே 2025 4:37:46 PM (IST)

தமிழறிஞர் கால்டுவெல் 211-வது பிறந்தநாள் விழா: தமிழக அரசின் சார்பில் ஆட்சியர் மரியாதை!
புதன் 7, மே 2025 12:11:51 PM (IST)

நெல்லை மாநகர் குளங்களில் அமலைச் செடிகள் அகற்றும் பணி: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
செவ்வாய் 6, மே 2025 4:36:31 PM (IST)
