» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மணிமேகலை விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்பு - ஆட்சியர் சுகுமார் தகவல்
சனி 12, ஏப்ரல் 2025 5:27:19 PM (IST)
2024-25ம் ஆண்டு மணிமேகலை விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தெரிவித்துள்ளார்.

அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் கிராம ஊராட்சிப் பகுதிகளில் சிறப்பாக செயல்படும் சுய உதவிக் குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், வட்டார அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் சிறப்பாக செயல்படும் சுய உதவிக் குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் நகர அளவிலான கூட்டமைப்புகளிடமிருந்து மணிமேகலை விருதுகளுக்கான விண்ணப்பங்கள் பின்வருவாறு வரவேற்கப்படுகிறது.
கிராமம், பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் சேர்ந்த குழுக்கள் இவ்விருதுகளுக்கான விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட வட்டார இயக்க மேலாண்மை அலகிலும், மாநகராட்சி பகுதியை சார்ந்த குழுக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள (மகளிர் திட்டம்), தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகத்திலும் 30.04.2025 பிற்பகல் 5.30 மணி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
மேலும், கூடுதல் விபரங்களுக்கு 9444094357 என்ற எண்ணிலும், திருநெல்வேலி தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகத்தினையும் (மகளிர் திட்டம்) தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 8, மே 2025 3:56:15 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 92.57 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி
வியாழன் 8, மே 2025 12:51:53 PM (IST)

சுற்றுலாதலங்களில் மதி அங்காடி நடத்துவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் தகவல்
வியாழன் 8, மே 2025 11:21:00 AM (IST)

தமிழ்நாட்டில் வெற்றிவேல் வீரவேல் ஆபரேஷன் : நயினார் நாகேந்திரன் பேட்டி
புதன் 7, மே 2025 4:37:46 PM (IST)

தமிழறிஞர் கால்டுவெல் 211-வது பிறந்தநாள் விழா: தமிழக அரசின் சார்பில் ஆட்சியர் மரியாதை!
புதன் 7, மே 2025 12:11:51 PM (IST)

நெல்லை மாநகர் குளங்களில் அமலைச் செடிகள் அகற்றும் பணி: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
செவ்வாய் 6, மே 2025 4:36:31 PM (IST)
