» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை கண்டித்து நெல்லையில் பாகிஸ்தான் கொடி எரிப்பு!
வியாழன் 24, ஏப்ரல் 2025 5:48:53 PM (IST)
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை கண்டித்து நெல்லையில் பாகிஸ்தான் கொடியை எரித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சுற்றுலா தளமான பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி, பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இந்த பயங்கரவாத செயலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த பயங்கரவாத செயலைக் கண்டித்து, திருநெல்வேலி மாவட்டம், அம்பை கீழரதவீதியில் வஜ்ரசேனா என்ற அமைப்பினர் நேற்று நள்ளிரவில் திடீரென பாகிஸ்தான் கொடியை தீயிட்டு எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது நடந்த தாக்குதலை கண்டித்து பாகிஸ்தானுக்கு எதிரான கோஷங்களை அவர்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உரிமம் பெறாமல் செயல்படும் மனநல மையங்கள் மீது நடவடிக்கை: ஆட்சியர் சுகுமார் எச்சரிக்கை!
வியாழன் 18, செப்டம்பர் 2025 5:25:05 PM (IST)

வாலிபர் மீது கார் ஏற்றிய போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்!
வியாழன் 18, செப்டம்பர் 2025 11:39:54 AM (IST)

பிளாஸ்டிக் குடோன் தீவிபத்தில் 10 லட்சம் சேதம்: புகைமூட்டத்தால் பொதுமக்கள் கடும் அவதி!!
வியாழன் 18, செப்டம்பர் 2025 11:36:24 AM (IST)

தாயை வெட்டிக்கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை: நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு
வியாழன் 18, செப்டம்பர் 2025 8:29:56 AM (IST)

நெல்லையில் 26ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தகவல்!
புதன் 17, செப்டம்பர் 2025 3:53:47 PM (IST)

பேரீச்சம்பழத்தில் கஞ்சாவை மறைத்து வைத்து சிறையில் மகனுக்கு கொடுக்க வந்த பெண் கைது!
புதன் 17, செப்டம்பர் 2025 11:04:28 AM (IST)
