» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நாங்குநேரி வழக்கறிஞர் சங்கத் தேர்தல் : உயர்நீதிமன்றம் உத்தரவு
சனி 26, ஏப்ரல் 2025 3:26:36 PM (IST)

2024 டிசம்பர் 31 தேதிக்குரிய வாக்காளர் பட்டியல் அடிப்படையில் நாங்குநேரி வழக்கறிஞர் சங்க தேர்தலை நடத்திட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டம், நாங்குநேரி வழக்கறிஞர் சங்கத்தில் 185 வழக்கறிஞர்கள் உறுப்பினராக உள்ளனர். 2024 - 25 ஆண்டிற்கான நாங்குநேரி வழக்கறிஞர் சங்க தேர்தலை சங்க விதிகளின்படி 2024 டிசம்பர் 31 தேதிக்குரிய வாக்காளர் பட்டியலை பின்பற்றாமல் 2025 மார்ச் 31 தேதிக்குரிய வாக்காளர் பட்டியல் அடிப்படையில் நடத்துவதற்கு தேர்தல் ஆணையர் ஒருவரையும் நியமித்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
நாங்குநேரி வழக்கறிஞர்கள் சங்க 2024- 25 தேர்தலில் 2024 டிசம்பர் 31 தேதிக்குரிய வாக்காளர் பட்டியல் அடிப்படையில் தேர்தல் நடத்திடவும், தேர்தல் ஆணையரை நியமிக்க கோரியும் நாங்குநேரி வழக்கறிஞர் ஏ.சி.பேச்சிமுத்து தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் மதுரை கிளை, தேர்தல் ஆணையராக மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வி. சுகுமாரை நியமித்தும், 2024 டிசம்பர் 31 தேதிக்குரிய வாக்காளர் பட்டியல் அடிப்படையில் நாங்குநேரி வழக்கறிஞர் சங்க தேர்தலை நடத்திடவும் நீதிபதிகள் நிஷா பானு மற்றும் ஸ்ரீமதி ஆகியோர் உத்தரவிட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம்
ஞாயிறு 11, மே 2025 9:33:44 AM (IST)

நெல்லை, பாளை தொகுதிகள் அ.தி.மு.க.வுக்கு வேண்டும்: இபிஎஸ்க்கு தொண்டர்கள் கடிதம்!
சனி 10, மே 2025 12:51:20 PM (IST)

மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து 2 பவுன் தங்க சங்கிலி பறிப்பு: வாலிபர் கைது!
சனி 10, மே 2025 12:44:11 PM (IST)

கூடன்குளம் அணுமின்நிலையத்தில் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை!
சனி 10, மே 2025 11:38:51 AM (IST)

பெட்ரோல் பங்க் ஊழியரிடம் ரூ.36 லட்சம் கொள்ளை: பெண் உள்பட 10 பேர் கும்பல் கைது!
சனி 10, மே 2025 9:04:41 AM (IST)

நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 8, மே 2025 3:56:15 PM (IST)
