» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நாங்குநேரி வழக்கறிஞர் சங்கத் தேர்தல் : உயர்நீதிமன்றம் உத்தரவு
சனி 26, ஏப்ரல் 2025 3:26:36 PM (IST)

2024 டிசம்பர் 31 தேதிக்குரிய வாக்காளர் பட்டியல் அடிப்படையில் நாங்குநேரி வழக்கறிஞர் சங்க தேர்தலை நடத்திட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டம், நாங்குநேரி வழக்கறிஞர் சங்கத்தில் 185 வழக்கறிஞர்கள் உறுப்பினராக உள்ளனர். 2024 - 25 ஆண்டிற்கான நாங்குநேரி வழக்கறிஞர் சங்க தேர்தலை சங்க விதிகளின்படி 2024 டிசம்பர் 31 தேதிக்குரிய வாக்காளர் பட்டியலை பின்பற்றாமல் 2025 மார்ச் 31 தேதிக்குரிய வாக்காளர் பட்டியல் அடிப்படையில் நடத்துவதற்கு தேர்தல் ஆணையர் ஒருவரையும் நியமித்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
நாங்குநேரி வழக்கறிஞர்கள் சங்க 2024- 25 தேர்தலில் 2024 டிசம்பர் 31 தேதிக்குரிய வாக்காளர் பட்டியல் அடிப்படையில் தேர்தல் நடத்திடவும், தேர்தல் ஆணையரை நியமிக்க கோரியும் நாங்குநேரி வழக்கறிஞர் ஏ.சி.பேச்சிமுத்து தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் மதுரை கிளை, தேர்தல் ஆணையராக மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வி. சுகுமாரை நியமித்தும், 2024 டிசம்பர் 31 தேதிக்குரிய வாக்காளர் பட்டியல் அடிப்படையில் நாங்குநேரி வழக்கறிஞர் சங்க தேர்தலை நடத்திடவும் நீதிபதிகள் நிஷா பானு மற்றும் ஸ்ரீமதி ஆகியோர் உத்தரவிட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 8, மே 2025 3:56:15 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 92.57 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி
வியாழன் 8, மே 2025 12:51:53 PM (IST)

சுற்றுலாதலங்களில் மதி அங்காடி நடத்துவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் தகவல்
வியாழன் 8, மே 2025 11:21:00 AM (IST)

தமிழ்நாட்டில் வெற்றிவேல் வீரவேல் ஆபரேஷன் : நயினார் நாகேந்திரன் பேட்டி
புதன் 7, மே 2025 4:37:46 PM (IST)

தமிழறிஞர் கால்டுவெல் 211-வது பிறந்தநாள் விழா: தமிழக அரசின் சார்பில் ஆட்சியர் மரியாதை!
புதன் 7, மே 2025 12:11:51 PM (IST)

நெல்லை மாநகர் குளங்களில் அமலைச் செடிகள் அகற்றும் பணி: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
செவ்வாய் 6, மே 2025 4:36:31 PM (IST)
