» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நாங்குநேரி வழக்கறிஞர் சங்கத் தேர்தல் : உயர்நீதிமன்றம் உத்தரவு
சனி 26, ஏப்ரல் 2025 3:26:36 PM (IST)

2024 டிசம்பர் 31 தேதிக்குரிய வாக்காளர் பட்டியல் அடிப்படையில் நாங்குநேரி வழக்கறிஞர் சங்க தேர்தலை நடத்திட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டம், நாங்குநேரி வழக்கறிஞர் சங்கத்தில் 185 வழக்கறிஞர்கள் உறுப்பினராக உள்ளனர். 2024 - 25 ஆண்டிற்கான நாங்குநேரி வழக்கறிஞர் சங்க தேர்தலை சங்க விதிகளின்படி 2024 டிசம்பர் 31 தேதிக்குரிய வாக்காளர் பட்டியலை பின்பற்றாமல் 2025 மார்ச் 31 தேதிக்குரிய வாக்காளர் பட்டியல் அடிப்படையில் நடத்துவதற்கு தேர்தல் ஆணையர் ஒருவரையும் நியமித்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
நாங்குநேரி வழக்கறிஞர்கள் சங்க 2024- 25 தேர்தலில் 2024 டிசம்பர் 31 தேதிக்குரிய வாக்காளர் பட்டியல் அடிப்படையில் தேர்தல் நடத்திடவும், தேர்தல் ஆணையரை நியமிக்க கோரியும் நாங்குநேரி வழக்கறிஞர் ஏ.சி.பேச்சிமுத்து தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் மதுரை கிளை, தேர்தல் ஆணையராக மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வி. சுகுமாரை நியமித்தும், 2024 டிசம்பர் 31 தேதிக்குரிய வாக்காளர் பட்டியல் அடிப்படையில் நாங்குநேரி வழக்கறிஞர் சங்க தேர்தலை நடத்திடவும் நீதிபதிகள் நிஷா பானு மற்றும் ஸ்ரீமதி ஆகியோர் உத்தரவிட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள்: மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியர் அழைப்பு
வெள்ளி 5, டிசம்பர் 2025 4:36:56 PM (IST)

நம்பியாறு நீர்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்தார் சபாநாயகர் அப்பாவு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 4:17:31 PM (IST)

நெல்லையில் வாலிபர் கொலை வழக்கில் குற்றவாளி கைது
வெள்ளி 5, டிசம்பர் 2025 4:12:49 PM (IST)

தமிழ்நாட்டில் தலைமைக்காவலருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை : அன்புமணி குற்றச்சாட்டு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:31:37 PM (IST)

12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை
வெள்ளி 5, டிசம்பர் 2025 10:52:06 AM (IST)

நெல்லை மாவட்டத்தில் எஸ்ஐஆர் பணிகள் : தேர்தல் ஆணையத்தின் இயக்குநர் ஆய்வு!
வியாழன் 4, டிசம்பர் 2025 5:02:54 PM (IST)


