» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லையில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது: 8 பைக்குகள் மீட்பு
சனி 21, ஜூன் 2025 12:41:09 PM (IST)
நெல்லையில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட 3பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 8 இருசக்கர வாகனங்கள் மீட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாநகர பகுதிகளில் தொடர்ச்சியாக இருசக்கர வாகன திருட்டு சம்பவங்கள் நடந்து வந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பொருட்டு கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில் போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். அதில் தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தைச் சேர்ந்த பிரபாகர்ராஜா (28), தென்காசி மாவட்டம், மாறாந்தையைச் சேர்ந்த சரவணன்(45) மற்றும் இசக்கிமுத்து(25) ஆகிய 3 பேர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து மேற்சொன்ன 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 8 இருசக்கர வாகனங்கள் மீட்டுள்ளனர். மேலும் மீட்கப்பட்ட வாகனங்களில் மதுரை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலிருந்து திருடப்பட்ட வாகனங்களும் உள்ளன. இதனை தொடர்ந்து குற்றவாளிகளை பாளையங்கோட்டை போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஈரான் நாட்டில் தவிக்கும் திருநெல்வேலி மாவட்ட மீனவர்களை மீட்க கோரி சபாநாயகரிடம் மனு!
சனி 21, ஜூன் 2025 8:04:28 PM (IST)

தேர்வினைக் கொண்டாடுவோம் சிறப்பு பயிலரங்கம் : நடிகர் தாமு பங்கேற்பு
வெள்ளி 20, ஜூன் 2025 8:47:57 PM (IST)

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் முன்னேற்பாடு பணிகள்: ஆட்சியர் இரா.சுகுமார் ஆலோசனை!
வெள்ளி 20, ஜூன் 2025 5:45:04 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு
வெள்ளி 20, ஜூன் 2025 5:28:41 PM (IST)

நெல்சாகுபடிக்கு சிறப்புத் தொகுப்புத் திட்டம் : ஆட்சியர் இரா.சுகுமார் தகவல்
வெள்ளி 20, ஜூன் 2025 3:55:50 PM (IST)

அரசு பஸ்சின் அச்சு முறிந்து சாலையில் ஓடிய சக்கரங்கள்: 3 மாணவர்கள் படுகாயம்!!
வெள்ளி 20, ஜூன் 2025 3:25:32 PM (IST)
