» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சிலம்பு எக்ஸ்பிரசை தினசரி ரயிலாக மாற்ற வேண்டும்: மத்திய அமைச்சரிடம் தென்காசி எம்.பி. கோரிக்கை!

வியாழன் 12, பிப்ரவரி 2026 12:02:53 PM (IST)

சிலம்பு எக்ஸ்பிரசை தினசரி ரயிலாக மாற்ற வேண்டும் என்று மத்திய ரயில்வே அமைச்சரை நேரில் சந்தித்து தென்காசி எம்.பி. ராணி ஸ்ரீகுமார் கோரிக்கை மனு அளித்துள்ளார். 

செங்கோட்டை - தாம்பரம் இடையேயான சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை தினசரி சேவையாக மாற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை நேரில் சந்தித்து மனு அளித்தார்.

மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் அவர் அளித்துள்ள கோரிக்கை மனுவில் "தற்போது செங்கோட்டை - தாம்பரம் இடையே வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டும் இயக்கப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை, பொதுமக்கள் வசதிக்காக தினசரி சேவையாக மாற்ற வேண்டும்.

கோயம்புத்தூரிலிருந்து மதுரை வரை இயக்கப்படும் மதுரை இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலைச் செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும். சென்னை - கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு பாம்புகோவில் சந்தை ரயில் நிலையத்தில் கூடுதல் நிறுத்தம் வழங்க வேண்டும்.

சென்னை - செங்கோட்டை இடையே புதிய வந்தே பாரத் ரயில் சேவையை அறிமுகப்படுத்த வேண்டும். பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் சென்னையிலிருந்து புறப்படும் நேரத்தைப் பழைய கால அட்டவணைப்படியே மாற்றி அமைக்க வேண்டும்.

தென்காசி மாவட்டம் திப்பணம்பட்டி ரயில்வே கேட் பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று கோரிக்கை விடுத்துள்ளார். இந்தக் கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உறுதியளித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory