» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
வாக்குச்சாவடி மறுசீரமைப்பு, தேர்தல் கூட்டங்கள் : அரசியல் கட்சிகளுடன் ஆட்சியர் ஆலோசனை!
வெள்ளி 13, மார்ச் 2026 5:41:13 PM (IST)

எதிர்வரும் 2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்கள் மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கான இடங்களைத் தேர்வு செய்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசன்னகுமார் முன்னிலை வகித்தார்.
பொதுமக்கள் சிரமமின்றி வாக்களிக்க ஏதுவாக, மாவட்டத்தின் 5 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்குச்சாவடி மையங்கள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடி எண்கள் 151, 206, 113, 114 ஆகிய 4 மையங்கள் அருகிலுள்ள இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. வாக்குச்சாவடி எண்கள் 200, 266 ஆகிய 2 மையங்களை மாற்ற பரிந்துரை செய்யப்பட்டு, அரசியல் கட்சி பிரதிநிதிகளின் ஒப்புதல் பெறப்பட்டது.
தேர்தல் பொதுக்கூட்டங்கள்: 5,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ளும் பிரம்மாண்ட பொதுக்கூட்டங்களை நடத்த, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அரசு புறம்போக்கு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகள் கூடுதலாக விரும்பும் இடங்களின் பட்டியலை தேர்தல் பிரிவில் வழங்கலாம் என ஆட்சியர் தெரிவித்தார்.
விண்ணப்ப நடைமுறைகள்: தலைவர்கள் மற்றும் பேச்சாளர்கள் பொது இடங்களில் உரையாற்ற அனுமதி பெறுவதற்கான வழிமுறைகள் மற்றும் தேர்தல் ஆணையம் வகுத்துள்ள பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்து விளக்கப்பட்டது. வாக்குச்சாவடி மாற்றம் மற்றும் கூட்டங்கள் தொடர்பான கூடுதல் ஆலோசனைகளை அரசியல் கட்சிகள் எழுத்துப்பூர்வமாக வழங்க ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.துரை, மாநகராட்சி ஆணையாளர் மோனிகா ராணா, சேரன்மகாதேவி சார் ஆட்சியர் ஆயுஸ்குப்தா, வருவாய் கோட்டாட்சியர் பிரியா, மாவட்ட வழங்கல் அலுவலர் சிந்து, ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் அனிதா (பொது), சுப்பிரமணியன் (தேர்தல்) மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குரூப் 2 முதன்மை தேர்வுக்கு 9 மணிக்கு மேல் வந்தால் அனுமதி கிடையாது: ஆட்சியர் அறிவிப்பு
வெள்ளி 13, மார்ச் 2026 12:53:27 PM (IST)

இளம்பெண் தலை துண்டித்து கொடூர கொலை: நடத்தை சந்தேகத்தால் கணவர் வெறிச்செயல்!
வெள்ளி 13, மார்ச் 2026 8:32:53 AM (IST)

நெல்லையில் 3 சிறுமிகளுக்குப் பாலியல் வன்கொடுமை: போக்சோ குற்றவாளிக்குத் தூக்குத் தண்டனை!
வியாழன் 12, மார்ச் 2026 8:30:53 PM (IST)

சிறுமியை கடத்திச் சென்று கட்டாயத் திருமணம் : வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை!
வியாழன் 12, மார்ச் 2026 3:28:28 PM (IST)

மண்டல தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு: ஆட்சியர் சுகுமார் தொடங்கி வைத்தார்
புதன் 11, மார்ச் 2026 4:56:24 PM (IST)

நெல்லையில் 11 இடங்களில் சோதனைச்சாவடி: எல்லை பாதுகாப்பு படையினர் தீவிர வாகன சோதனை!
புதன் 11, மார்ச் 2026 8:40:02 AM (IST)

