» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
ஓடும் ரயிலில் பெண் பயணியிடம் நகை பறிக்க முயற்சி: அறநிலையத்துறை ஊழியர் கைது!
செவ்வாய் 14, ஏப்ரல் 2026 8:27:17 AM (IST)
நெல்லை - செங்கோட்டை ரயிலில் பெண் பயணியின் நகையைப் பறிக்க முயன்ற குற்றாலநாதர் கோவில் ஊழியரை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த 12-ஆம் தேதி நெல்லையிலிருந்து செங்கோட்டைக்குச் சென்ற பயணிகள் ரயிலில் கீழப்பாவூர் பகுதியைச் சேர்ந்த சாந்தி என்பவர் பயணம் செய்தார். ரயில் தென்காசி ரயில் நிலையத்தை வந்தடைந்தபோது, அதே பெட்டியில் இருந்த மர்ம நபர் ஒருவர் திடீரென சாந்தியின் கழுத்தில் இருந்த நகையைப் பறிக்க முயன்றுள்ளார். சாந்தி கூச்சலிடவே, பிடிபடுவோம் என்ற பயத்தில் அந்த நபர் ரயிலிலிருந்து இறங்கித் தப்பி ஓடிவிட்டார்.
பாதிக்கப்பட்ட சாந்தி அளித்த புகாரின் பேரில், தென்காசி ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். ரயில்வே டிஎஸ்பி லட்சுமணன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் கேத்தரின் சுஜாதா தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரின் விசாரணையில், நகை பறிக்க முயன்றவர் தென்காசி மாவட்டம் குற்றாலம் கீழரத வீதியைச் சேர்ந்த கருப்பசாமி (55) என்பது தெரியவந்தது. இவர் குற்றாலம் குற்றாலநாதர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் தமிழ் புலவராகப் பணியாற்றி வருவது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கருப்பசாமியைப் போலீசார் நேற்று அதிரடியாகக் கைது செய்தனர். கைதான அவர் மீது காவல்துறை நடவடிக்கையைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு ஊழியரே ரயிலில் நகை பறிக்க முயன்ற சம்பவம் சக பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆலங்குளம் அருகே 6 பேருக்கு அரிவாள் வெட்டு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!
சனி 30, மே 2026 5:23:02 PM (IST)

திருமண விழாவில் புகுந்து 6 பேருக்கு சரமாரி அரிவாள் வெட்டு - முகமூடி கும்பல் வெறிச்செயல்!
சனி 30, மே 2026 8:52:51 AM (IST)

கல்லிடைக்குறிச்சியில் பக்ரீத் சிறப்புத் தொழுகை!
வெள்ளி 29, மே 2026 5:48:30 PM (IST)

குற்றாலம் அருவியில் குளிக்க கட்டணம் ரத்து : வனத்துறை அறிவிப்பு
வெள்ளி 29, மே 2026 12:25:12 PM (IST)

7 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் வட்டாட்சியருக்கு 3 ஆண்டு சிறை: நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!
வியாழன் 28, மே 2026 9:28:37 AM (IST)

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை!
செவ்வாய் 26, மே 2026 4:55:57 PM (IST)


