» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
குற்றாலம் மெயின் அருவியில் குளித்த பெண் மூச்சுத்திணறி உயிரிழப்பு!
ஞாயிறு 14, ஜூன் 2026 8:45:00 AM (IST)
குற்றாலம் மெயின் அருவியில் குளித்துக் கொண்டிருந்த சேலத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்குத் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுப் பரிதாபமாக உயிரிழந்தார்.
தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவியில் கடந்த சில நாட்களாகப் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், நேற்று முதல் பொதுமக்கள் குளிப்பதற்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டது. வார இறுதி விடுமுறை நாள் என்பதால், வெளியூர்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வாகனங்களில் வந்து மெயின் அருவியில் குவிந்தனர்.
சேலம் கேஸ் கம்பெனி மோசிக்கனார் வீதியைச் சேர்ந்த 51 வயதுடைய பரிதாள் பீவி என்பவர் தனது குடும்பத்தினருடன் குற்றாலத்திற்குச் சுற்றுலா வந்திருந்தார். அவர்கள் அனைவரும் மெயின் அருவியின் பெண்கள் பகுதியில் உற்சாகமாகக் குளித்துக் கொண்டிருந்தபோது, பரிதாள் பீவிக்குத் திடீரெனக் கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
அருகில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு அருவிக்கரைக்குக் கொண்டு வந்தனர். பின்னர் 108 அவசர ஊர்தி (ஆம்புலன்ஸ்) மூலமாகத் தென்காசி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த அரசு மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது குற்றாலத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், எதிர்பாராத அவசரக் காலங்களில் உயிரைக் காக்கும் வகையில், அருவிக்கரைகளிலேயே தற்காலிக முதலுதவி சிகிச்சை மையங்களையும் போதிய மருத்துவ வசதிகளையும் உடனடியாக ஏற்படுத்தித் தர வேண்டும் எனப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை: தலைமறைவாக இருந்த தென்காசி தனியார் கல்லூரி தாளாளர் கைது!
வியாழன் 30, ஜூலை 2026 12:30:12 PM (IST)

அரசுப் போக்குவரத்துக் கழக நெல்லை மண்டலப் பொது மேலாளராக மோகன் குமார் பொறுப்பேற்பு!
வியாழன் 30, ஜூலை 2026 11:10:30 AM (IST)

குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்!
வியாழன் 30, ஜூலை 2026 8:30:49 AM (IST)

இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து இரத்த தானம் செய்ய வேண்டும்: ஆட்சியர் வேண்டுகோள்
புதன் 29, ஜூலை 2026 12:47:15 PM (IST)

சங்கரன்கோவிலில் ஆடித்தபசு திருவிழா கோலாகலம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
புதன் 29, ஜூலை 2026 8:32:40 AM (IST)

நெல்லை பட்டமளிப்பு விழாவில் மாணவிகள் கண்ணீர் : இருகரம் கூப்பி மன்னிப்பு கேட்ட ஆளுநர் அர்லேகர்!
செவ்வாய் 28, ஜூலை 2026 3:52:31 PM (IST)


