» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
குற்றாலம் அருவிகளில் சீசன் களைகட்டியது: சுற்றுலாப் பயணிகள் உற்சாக குளியல்
சனி 4, ஜூலை 2026 12:28:42 PM (IST)

தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் சாரல் மழையின் காரணமாகக் குற்றால அருவிகளுக்குத் தண்ணீர் வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. வார இறுதி விடுமுறை நாளான இன்று சுற்றுலா பயணிகளின் வருகை பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகிறது.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நேற்று காலை முதல் மாலை வரை தொடர்ந்து சாரல் மழை பெய்துள்ளது. இதன் காரணமாகக் குற்றாலம் ஐந்தருவியின் ஐந்து கிளைகளிலும், மெயின் அருவியின் அனைத்துப் பகுதிகளிலும் பரவலாகத் தண்ணீர் கொட்டுகிறது. இதேபோல் புலியருவியின் மூன்று கிளைகளிலும், பழைய குற்றால அருவி மற்றும் சிற்றருவியிலும் தண்ணீர் வரத்து கணிசமாக உயர்ந்துள்ளது. இன்று காலையிலும் குற்றாலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விட்டு விட்டுச் சாரல் மழை பெய்து வருகிறது.
நேற்று மாலை முதலே சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், இன்று சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் கூட்டம் மேலும் அலைமோதியது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் கார்கள், வேன்கள், பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வந்தவண்ணம் உள்ளனர்.
ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்து நின்று குளித்து மகிழ்கின்றனர். பொதுமக்களின் நடமாட்டம் மற்றும் வாகனப் போக்குவரத்து அதிகரித்துள்ளதால், அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு அனைத்து அருவிப் பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் : அமைச்சர் மரிய வில்சன் ஆய்வு!
சனி 18, ஜூலை 2026 5:27:03 PM (IST)

எல் நினோ தாக்கம்: நெல், வாழை பயிர்களுக்குக் காப்பீடு செய்ய ஆட்சியர் அறிவுறுத்தல்!
வெள்ளி 17, ஜூலை 2026 3:56:03 PM (IST)

கூடங்குளம் அணுமின் நிலையத் தகவல்கள் கசிவுப் புகார்: இந்திய அணுசக்தி கழகம் மறுப்பு!
வியாழன் 16, ஜூலை 2026 3:55:08 PM (IST)

உயர்நீதிமன்ற உத்தரவு எதிரொலி: தாமிரபரணியை பாதுகாக்க ஆலோசனை - ஆட்சியர் அழைப்பு!
செவ்வாய் 14, ஜூலை 2026 4:38:54 PM (IST)

நெல்லையில் 17ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் ஆனந்த் மோகன் அறிவிப்பு
செவ்வாய் 14, ஜூலை 2026 11:18:16 AM (IST)

உலக மக்கள் தொகை தினம் விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர் ஆனந்த் மோகன் துவக்கி வைத்தார்!
திங்கள் 13, ஜூலை 2026 12:43:35 PM (IST)


