» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருவேங்கடம் அருகே 2,500 ஆண்டுகள் பழமையான சதுர வடிவ செங்கல் படிக்கிணறு கண்டுபிடிப்பு!
செவ்வாய் 7, ஜூலை 2026 3:55:45 PM (IST)

திருவேங்கடம் அருகே அகழாய்வில் சுமார் 2,500 ஆண்டுகள் பழமையான சங்க காலச் சதுர வடிவ செங்கல் படிக்கிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம், திருவேங்கடம் தாலுகா, காரிசாத்தான் பஞ்சாயத்திற்குட்பட்ட மலையடிப்பட்டி மலையின் கீழ் பகுதியில், வைப்பாறு ஆற்றின் வலக்கரையில் தொல்பொருள் ஆய்வு துறையினரால் நடத்தப்பட்டு வரும் அகழாய்வில், சுமார் 2,500 ஆண்டுகள் பழமையான சங்க காலச் சதுர வடிவ செங்கல் படிக்கிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மலையடிப்பட்டி அகழ்வாராய்ச்சித் தளத்தில் சங்க காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படும் பெரிய செங்கல் கட்டமைப்பை மாநில தொல்லியல் துறை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்தக் கிணறு தலா 4 மீட்டர் நீளமும், 4 மீட்டர் அகலமும் கொண்ட சதுர வடிவ அமைப்பில் உள்ளது. கிணற்றின் உள்பகுதிக்கு இறங்குவதற்கு ஏதுவாகக் கற்களாலான படிக்கட்டுகள் நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் கண்டெடுக்கப்பட்ட முற்கால வரலாற்றுக் காலத்தைச் சேர்ந்த முதல் செங்கல் படிக்கிணறு இதுவே என்று ஆராய்ச்சியாளர்கள் பெருமிதத்துடன் குறிப்பிடுகின்றனர். இதில் பயன்படுத்தப்பட்டுள்ள செங்கற்கள் 40 செ.மீ. நீளமும், 20 செ.மீ. அகலமும், 7 செ.மீ. தடிமனும் கொண்டவையாக உள்ளன.
இங்குப் பயன்படுத்தப்பட்டுள்ள செங்கற்களின் அளவு, தடிமன் மற்றும் கட்டுமான அமைப்பு ஆகியவை ஏற்கனவே கீழடி, அழகன்குளம், பூம்புகார் போன்ற புகழ்பெற்ற வரலாற்றுத் தளங்களில் கண்டெடுக்கப்பட்ட செங்கற்களின் பண்புகளுடன் ஒத்துப் போகின்றன. இதன் அடிப்படையில், இந்த வரலாற்று உள்கட்டமைப்பு சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய சங்க காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.
அகழாய்வுப் பணிகள் குறித்துத் தொல்லியல் துறையினர் கூறுகையில், "இந்தச் செங்கல் கிணற்றுக்குள் தற்போது வரை 2 மீட்டர் ஆழம் வரை அகழ்ந்துள்ளோம். தொடர் உழைப்பிற்குப் பிறகே கிணற்றின் முழுமையான ஆழம் விபரமாகத் தெரியவரும். அதேபோல், இந்தத் தளத்தில் அதிக அளவு தகரம் பூசப்பட்ட வெண்கலப் பொருட்கள், இரும்புப் பொருட்கள், சுடுமண் பொருட்கள், முதுமக்கள் தாழி, தனித்துவமான சிவப்பு பூச்சு பூசப்பட்ட பானைகள் மற்றும் நுண்கற்காலக் கருவிகள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன" எனத் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் குரூப் 2 தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் 24ஆம் தேதி தொடங்குகிறது!
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 10:44:13 AM (IST)

சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை!: போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 12:53:39 PM (IST)

நெல்லை அருகே காகித ஆலையில் பயங்கர தீ விபத்து: 25,000 டன் காகிதங்கள் எரிந்து நாசம்!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 12:17:22 PM (IST)

உலக புகைப்பட தினம்: நெல்லை புகைப்படக் கலை சங்கத்தினர் ரத்ததானம்!
புதன் 19, ஆகஸ்ட் 2026 5:41:48 PM (IST)

ஒப்பந்ததாரரிடம் ரூ. 1 லட்சம் லஞ்சம் பெற்ற வனச்சரகர் கைது: லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி!
புதன் 19, ஆகஸ்ட் 2026 3:28:19 PM (IST)

நீட் தேர்வில் வெற்றி: ஒரே நேரத்தில் மருத்துவப் படிப்புக்கு தேர்வான நெசவுத்தொழிலாளியின் 3 மகன்கள்!
புதன் 19, ஆகஸ்ட் 2026 8:42:51 AM (IST)


