» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பதவிப் பிரமாணத்திற்கு எதிரான குற்றம்: முதல்வர் விஜய்க்கு அப்பாவு கண்டனம்!
சனி 11, ஜூலை 2026 5:15:59 PM (IST)
சிபிஐ விசாரணையில் இருக்கும் 41 பேர் இறந்த கரூர் சம்பவம் குறித்துப் பொதுவெளியில் பேசுவது பதவிப் பிரமாணத்திற்கு எதிரான குற்றம் என்று சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகர் அப்பாவு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் கண்காணிப்பில் சிபிஐ விசாரணையில் இருக்கும் 41 பேர் இறந்த கரூர் சம்பவம் குறித்துப் பொதுவெளியில் பேசுவது இந்திய அரசியல் சட்டப்படி குற்றம் என்ற விபரம் தமிழக முதல்வருக்குத் தெரியாதா எனக் கேள்வி எழுப்பியுள்ளார். 41 பேர் கொலைக்குக் காரணம் காவல் துறைதான் என்ற அபாண்ட குற்றச்சாட்டை இருமுறை டெல்லி சிபிஐ விசாரணைக்குச் சென்றபோது தெரிவித்தீர்களா என்றும் வினவியுள்ளார்.தமிழக முதல்வர் அரசு தலைமைச் செயலாளர், முதல்வரின் தனிச் செயலாளர்கள் வழிகாட்டுதலோடு ஆட்சி நடத்துகிறாரா அல்லது சினிமா தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் வழிகாட்டுதலோடு வசனம் பேசி வருகிறாரா என அப்பாவு விமர்சித்துள்ளார்.
சட்டப்பேரவையில் கட்சி நிதி என்று சொன்னதும் திமுகவினர் ஓடிவிட்டார்கள் என்று நக்கலடிக்கும் முதல்வர் விஜய், தேர்தலுக்கு முன் உங்கள் சட்டப்பேரவை வேட்பாளர்கள் ஒவ்வொருவரிடமும் 2 கோடி ரூபாய் முதல் 10 கோடி ரூபாய் வரை கட்சி நிதி பெற்றுக்கொண்டுதான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதாகத் தவெக கட்சியினர் புலம்புவது காதுகளுக்கு எட்டவில்லையா என்றும், இதுதான் தூய கட்சி ஆட்சியின் லட்சணமா என்றும் முன்னாள் சபாநாயகர் அப்பாவு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மதுபோதை தகராறில் வெறிச்செயல்: வாலிபரை வெட்டிக்கொன்ற 3 சிறுவர்கள் சிக்கினர்!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 4:52:09 PM (IST)

மிலாடி நபி: மதுபானக்கடைகள்,பார்களை மூட ஆட்சியர் ஆனந்த் மோகன் உத்தரவு!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 12:42:41 PM (IST)

மக்களுக்கான த.வெ.க. ஆட்சியில் ஊழலுக்கு இடமில்லை : நெல்லையில் அமைச்சர் ஜெகதீஸ்வரி பேச்சு!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:51:53 AM (IST)

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி இளம் பெண்ணை ஏமாற்றிய இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!
சனி 22, ஆகஸ்ட் 2026 12:33:41 PM (IST)

காவல் நிலையத்தில் வாலிபர் தற்கொலை முயற்சி : தலைமை காவலர் உள்பட 2பேர் சஸ்பெண்ட்!
சனி 22, ஆகஸ்ட் 2026 11:31:58 AM (IST)

திருநெல்வேலியில் செப். 19-ல் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் தகவல்!
சனி 22, ஆகஸ்ட் 2026 11:09:15 AM (IST)



ஓட்டு போட்ட முட்டாள்Jul 12, 2026 - 07:53:00 AM | Posted IP 104.2*****