» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தெற்கு கள்ளிகுளம் அதிசய பனிமாதா ஆலய 141-வது ஆண்டு திருவிழா: திருத்தேர் பவனி கோலாகலம்!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 12:18:30 PM (IST)

தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலயத்தின் 141-ஆம் ஆண்டுத் திருவிழாவை முன்னிட்டு, அன்னையின் திருத்தேர் பவனி கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வடம்பிடித்துத் தேர் இழுத்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் தெற்கு கள்ளிகுளம் பிரசித்தி பெற்ற அதிசய பனிமாதா பேராலயத்தின் 141-வது ஆண்டுத் திருவிழா கடந்த ஜூலை 27-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்ற இத்திருவிழாவில், விழா நாட்களில் தினமும் காலையில் திரியாத்திரை பவனி மற்றும் சிறப்புத் திருப்பலிகள் நடைபெற்றன.
விழாவின் 9-ஆம் திருவிழாவான நேற்று இரவில், குழித்துறை மறைமாவட்ட ஆயர் ஆல்பர்ட் ஜி.ஏ. அனஸ்தாஸ் தலைமையில் சிறப்பு ஆடம்பர மாலை ஆராதனை மற்றும் நற்கருணைத் திருப்பலி நடைபெற்றது.
நள்ளிரவு 12:00 மணியளவில், மின்விளக்குகளாலும் மலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட அதிசய பனிமாதா அன்னையின் சொகுசுத் திருத்தேர் பவனி தொடங்கியது. இத்தேர்பவனியை பேராலயத் தர்மகர்த்தா மரியராஜ் ஆசிரியர் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, அங்குத் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்களும் பக்தர்களும் "மரியே வாழ்க" என்ற முழக்கத்துடன் வடம்பிடித்துத் தேரை இழுத்து வழிபட்டனர். இத்திருவிழாவில் சென்னை, மும்பை, கேரளா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, நேர்த்திக்கடனாக உப்பு மற்றும் மிளகு ஆகியவற்றைச் சப்பரத்தின் மீது தூவி காணிக்கை செலுத்தி வழிபட்டனர்.
அன்னையின் திருத்தேர் பேராலயத்தைச் சுற்றியுள்ள முக்கிய ரதவீதிகள் வழியாக வலம் வந்து, அதிகாலை 5:00 மணியளவில் மீண்டும் நிலைக்கு வந்து சேர்ந்தது. தொடர்ந்து, 10-ஆம் திருவிழாவான இன்று அதிகாலை 5:15 மணிக்கு, பாளையங்கோட்டை மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஜூடுபால்ராஜ் தலைமையில் நடைபெற்ற ஆடம்பரக் கூட்டுத் திருப்பலி மற்றும் நற்கருணை ஆசீருடன் 141-வது ஆண்டுத் திருவிழா நிறைவு பெற்றது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நீச்சல் பயிற்சி அளிப்பதாகக் கூறி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 8:43:48 AM (IST)

ஸ்கூட்டரில் சென்றவர் மீது திமுகவினர் சரமாரித் தாக்குதல்: திருநெல்வேலியில் பரபரப்பு!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 5:46:05 PM (IST)

நெல்லை வி.கே. புரத்தில் ரூ.29.51 கோடியில் குடிநீர் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 4:42:56 PM (IST)

நெல்லையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 3:43:22 PM (IST)

மேற்குத் தொடர்ச்சி மலையில் கனமழை: சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 25 அடி உயர்வு!
ஞாயிறு 2, ஆகஸ்ட் 2026 11:42:22 AM (IST)

காரில் 3½ கிலோ கஞ்சா கடத்தல்: சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் உட்பட 3 பேர் கைது!
சனி 1, ஆகஸ்ட் 2026 12:35:50 PM (IST)


