» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கிணறு வெட்டும் பணியின் போது கயிறு அறுந்து விபத்து: 3 தொழிலாளர்கள் பலி!
செவ்வாய் 30, ஜூலை 2024 11:27:20 AM (IST)
திருவெண்ணெய்நல்லூர் அருகே கிணறு வெட்டும் போது, பொக்லைன் ரோப் அறுந்து விபத்து ஏற்பட்டதில் 3 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் வட்டம், அருங்குறுக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் மகன் கண்ணன். இவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள கிணற்றை ஆழப்படுத்தும் பணிகள் கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகேயுள்ள பெருங்குறுக்கை கிராமத்தைச் சேர்ந்த தணிகாசலம் (48), நரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணன் ( 40), உளுந்தூர்பேட்டை நெய்வணை கிராமத்தைச் சேர்ந்த முருகன் (38) ஆகியோர் நேற்று இரவு பொக்லைன் இயந்திரம் உதவியுடன் கிணற்றை ஆழ்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பொக்லைன் இயந்திரத்தில் கட்டப்பட்டிருந்த ரோப் அறுந்து கீழே விழுந்ததில் விபத்து ஏற்பட்டது. இதில், தணிகாசலம், ஹரிகிருஷ்ணன், முருகன் ஆகிய 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு கிணற்றுக்குள்ளேயே உயிரிழந்தனர். தகவலறிந்த திருவெண்ணெய்நல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 3 பேர்களின் சடலங்களையும் கைப்பற்றி, விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிலத்தின் உரிமையாளர் கண்ணனை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தோல்வி பயத்தால் வாக்காளர் பட்டியல் திருத்தத்தை முதல்வர் எதிர்க்கிறார் : நயினார் நாகேந்திரன்
செவ்வாய் 28, அக்டோபர் 2025 10:59:19 AM (IST)

போக்ஸோ வழக்குகளில் .103.62 கோடி நிவாரணம் : அமைச்சர் கீதாஜீவன் தகவல்!
செவ்வாய் 28, அக்டோபர் 2025 10:55:05 AM (IST)

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் மூன்று புதிய கிளைகள் திறப்பு விழா
செவ்வாய் 28, அக்டோபர் 2025 10:14:14 AM (IST)

திருவனந்தபுரம்-நாகர்கோவில் பயணிகள் ரயிலை நெல்லை வரை நீட்டிக்க வேண்டும்: விஜய்வசந்த் எம்.பி. கோரிக்கை
செவ்வாய் 28, அக்டோபர் 2025 8:19:18 AM (IST)

குமரி மாவட்ட முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
செவ்வாய் 28, அக்டோபர் 2025 8:14:46 AM (IST)

கடம்பூர் ரயில் நிலையத்தில் குருவாயூர் விரைவு ரயில் நின்று செல்லும் : தெற்கு ரயில்வே அறிவிப்பு
திங்கள் 27, அக்டோபர் 2025 9:34:16 PM (IST)




