» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பெண்களிடையே திமுகவுக்கு ஆதரவு அதிகரிப்பு: அமைச்சர் பெ.கீதாஜீவன் பேச்சு!
திங்கள் 12, ஆகஸ்ட் 2024 9:57:44 AM (IST)

தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளதால் திமுகவுக்கு பெண்களிடையே ஆதரவு மேலும் அதிகரித்துள்ளதாக, அமைச்சர் பெ. கீதாஜீவன் கூறினார்.
கோவில்பட்டியில் நகர திமுக செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. நகர்மன்றத் தலைவர் கா. கருணாநிதி வரவேற்றார். நகர அவைத்தலைவர் பி.எம். முனியசாமி தலைமை வகித்தார். நகர துணைச் செயலர்கள் எம்.டி.ஏ. காளியப்பன், ச. அன்பழகன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் தா. உலகராணி, நகரப் பொருளாளர் வி.சி. ராமமூர்த்தி, மாவட்டப் பிரதிநிதிகள் செ. ரவீந்திரன், எஸ். புஷ்பராஜ், கோ. மாரிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலரும் அமைச்சருமான பெ. கீதாஜீவன் பேசியதாவது: கடந்த பேரவைத் தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தோம். 2026 பேரவைத் தேர்தலில் இங்கு வெற்றிபெற வேண்டும் என உறுதியேற்க வேண்டும். மேலும், தமிழகத்தில் 220 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெற வேண்டும் என, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். அதற்காக இப்போதிருந்தே நாம் களப் பணியாற்ற வேண்டும்.
தேர்தல் வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்றியுள்ளதால், பெண்களிடையே திமுகவுக்கு ஆதரவு அதிகரித்துள்ளது. மகளிர் உரிமைத் தொகை திட்டம் அமைச்சர் உதயநிதியின் துறை மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. லிங்கம்பட்டி, கடம்பூரில் தொழிற்பேட்டை அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல, ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 2026ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி என்ற இலக்கை நோக்கிப் பயணிப்போம் என்றார்.
கூட்டத்தில், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் என். ராதாகிருஷ்ணன், ஒன்றியச் செயலர்கள் வீ. முருகேசன், கி. ராதாகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர்கள் இரா. ராமர், இரா. ரமேஷ், பீட்டர், மாவட்ட துணைச் செயலர் தா. ஏஞ்சலா, மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் கௌ. இந்துமதி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கேரளாவில் பஸ்கள் ஓடவில்லை: கோவையில் இருந்து புறப்பட்ட 50 பஸ்கள் எல்லையில் நிறுத்தம்!
புதன் 9, ஜூலை 2025 11:36:56 AM (IST)

அதிகாரிகள் கொடுமையால் சத்துணவு அமைப்பாளர் தற்கொலை: அன்புமணி குற்றச்சாட்டு
புதன் 9, ஜூலை 2025 10:46:28 AM (IST)

தமிழகத்தில் அரசு பஸ்கள் வழக்கம்போல் இயக்கம்: போக்குவரத்துத்துறை அமைச்சர் தகவல்!
புதன் 9, ஜூலை 2025 10:35:19 AM (IST)

திருச்செந்தூர் கோவில் மட்டுமல்ல மாதா கோவில் திருவிழாவாக இருந்தாலும் கடமையை செய்வேன்: கனிமொழி எம்பி
செவ்வாய் 8, ஜூலை 2025 8:12:52 PM (IST)

எல்லோருக்கும் எல்லாம் என்ற உயரிய நோக்கில் அரசு செயல்படுகிறது: அமைச்சர் மனோ தங்கராஜ்
செவ்வாய் 8, ஜூலை 2025 4:56:47 PM (IST)

கடலூர் ரயில் விபத்துக்கு மாவட்ட ஆட்சியரே காரணமா? தெற்கு ரயில்வே குற்றச்சாட்டு
செவ்வாய் 8, ஜூலை 2025 4:46:14 PM (IST)
